Manja Kuruvi

Manja Kuruvi Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

தந்தானே தந்தானே தந்தானேனா தந்த தானே தந்த தானே தந்தானேனா தந்தனா தந்தனா தந்தனா

மஞ்சக் குருவி என் நெஞ்சத் தழுவுவது எதுக்காக எதுக்காக பெண் தந்தனானா தந்தனானா தஞ்சம் அடைந்த பின் கொஞ்சி குலவுவது அதுக்காக அதுக்காக ஆண் தந்தனானா தந்தனானா

பொங்கப் பானையில் புதுச் சோறு பாலப் பொங்குற திருநாளு பட்டு சேலைய புது வெட்டி தொட்டு பேசுற திருநாளு சோடிசேரும்

மஞ்சக் குருவி என் நெஞ்சத் தழுவுவது எதுக்காக எதுக்காக பெண் தந்தனானா தந்தனானா தஞ்சம் அடைந்த பின் கொஞ்சி குலவுவது அதுக்காக அதுக்காக ஆண் தந்தனானா தந்தனானா

கருத்த மேகம் நீர் வார்க்க கரிசல் காடு பூப்பூக்கஓஒஒ பருத்தி பூத்த நாள் பார்த்து பரிசம் போடும் பூங்காத்து தோப்பும் காத்தும் சேர தேதி பாக்குமா


பெண் அம்மம்மா மம்முத மச்சான் இப்ப மந்திரம் வச்சான் இங்கு சம்மதப்பட்டா நெஞ்ச அம்பலத்ததான் ஆண் அப்பப்பப்பா ஜிங்கனுக்குத்தான் ஜிங்கு ஜினக்குஜான் இங்கு சொல்லடியம்மா என்ன உன் கணக்குத்தான்

மஞ்சக் குருவி என் நெஞ்சத் தழுவுவது எதுக்காக எதுக்காக தஞ்சம் அடைந்த பின் கொஞ்சி குலவுவது அதுக்காக அதுக்காக

உறவை பார்த்த பூ மாது முகத்த பாத்து பேசாதுஓஒஒ விழிகள் பேசி கேட்டாச்சு மௌனம் கூட பாட்டாச்சு பார்வை பேசும்போது வார்த்தை வேணுமா

பெண் அப்பப்பப்பா ஜிங்கனுக்குத்தான் ஜிங்கு ஜினக்குஜான் ஆண் அம்மம்மம்மா சொல்லடியம்மா என்ன உன் கணக்குத்தான்

அட மஞ்சக் குருவி என் நெஞ்சத் தழுவுவது எதுக்காக எதுக்காக தந்தனானா தந்தனானா தஞ்சம் அடைந்த பின் கொஞ்சி குலவுவது அதுக்காக அதுக்காக தந்தனானா தந்தனானா