Maru Vaarthai Pesathey

Maru Vaarthai Pesathey Song Lyrics In English


மறுவார்த்தை
பேசாதே மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு

மயில் தோகை
போலே விரல் உன்னை
வருடும் மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான்
உன்னை நினைக்காத
நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய் இல்லையே

விடியாத
காலைகள் முடியாத
மாலைகளில் வடியாத
வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்

மணி காட்டும்
கடிகாரம் தரும் வாடை
அறிந்தோம் உடைமாற்றும்
இடைவேளை அதன்
பின்பே உணர்ந்தோம்

மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ முடிவும் நீ
அலர் நீ அகிலம் நீ

தொலைதூரம்
சென்றாலும் தொடு வானம்
என்றாலும் நீ விழியோரம்
தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் எனும்
மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கனவாகி கலைந்தாய்


பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்

மறுவார்த்தை
பேசாதே மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு

மயில் தோகை
போலே விரல் உன்னை
வருடும் மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான்
உன்னை நினைக்காத
நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்
இல்லையே

மறுவார்த்தை
பேசாதே மடிமீது நீ தூங்கிடு