Maruthani Chareduthu |
---|
மருதாணிச் சாரெடுத்து
மயிலிறகால தொட்டு
மரிக்கொழுந்தே மணிப்புறாவே
மார் மேலே கோலம் ஒன்னு
கண்ணாலம் கட்ட போடட்டா சேர்ந்து நின்னு
பூஞ்சிட்டே பூஞ்சிட்டே
பொன் வண்டே வண்டே வண்டே வா
மருதாணிச் சாரெடுத்து
மயிலிறகால தொட்டு
எம் மாமன் நெஞ்சில் மறையாம நான் எழுதி
கண்ணாலம் கட்ட சொன்னாளே பூவழகி
ஆரம் கண்டேனே முத்தாரம் கண்டேனே
சிரிக்குது அது சிரிக்குது
வீரம் கண்டேனே வித்தாரம் கண்டேனே
விரிக்குது வல விரிக்குது
உச்சி மலையில்
ஓ ஓய்
மழை பொழிஞ்சு
ஓ ஓய்
நனைஞ்சதடி
ஓ ஓய்
மனக் குருவி
ஓ ஓய்
தவளச் சத்தம் கேட்டு
தாவுது நெஞ்சுல பாட்டு
மேள தாளம் போட்டு
குலவச் சத்தம் போட்டு
கூடுது ஆசையும் கூட்டு
கால நேரம் பாத்து
பூச்செண்டே பூச்செண்டே
பொன் வண்டே வண்டே வண்டே வா
மருதாணிச் சாரெடுத்து
மயிலிறகாலே தொட்டு
கொஞ்சாம கொஞ்சி
எம் மாமன் நெஞ்சில் மறையாம நான் எழுதி
கண்ணாலம் கட்ட சொன்னாளே பூவழகி
ராணி வந்தாளாம் மகராணி வந்தாளாம்
தெரியுது அது தெரியுது
ராணி நின்னாளாம் அவ நாணி நின்னாளாம்
புரியுது இது புரியுது
சிட்டுக் குருவி
ஓ ஓய்
எட்டிப் புடிச்சா
ஓ ஓய்
தட்டிக் கழிச்சா
ஓ ஓய்
விட்டுப் பறப்பா
ஓ ஓய்
கண்டாங்கிப் பூச் சேல கட்டி
மயக்குது ஆள
தாழம் பூவப் போல
புள்ளி போட்ட ரவிக்க
கன்னி விரிச்சது மேல
ஓல போடு ஓல
பூச்செண்டே பூச்செண்டே
பொன் வண்டே வண்டே வண்டே வா
மருதாணிச் சாரெடுத்து
மயிலிறகால தொட்டு
மரிக்கொழுந்தே மணிப் புறாவே
மார் மேலே கோலம் ஒன்னு
கண்ணாலம் கட்ட போடட்டா சேர்ந்து நின்னு
ஹோ ஊ ஓஒ
பூஞ்சிட்டே பூஞ்சிட்டே
பொன் வண்டே வண்டே வண்டே வா
மருதாணிச் சாரெடுத்து
மயிலிறகால தொட்டு