Mayil Iragu |
---|
மயிலிறகு போல நான்
பொழுதும் இளங்காற்றிலே
மிதந்து விளையாடுவேன்
உனது உயிர் கூட்டிலே
ஒரு கோடு கோலமாக
துணை சேரும் தந்தை விரலே
அன்பிலே அறிகிறேன் கடவுளே
ஹ்ம்ம்
மயிலிறகு போல நான்
பொழுதும் இளங்காற்றிலே
மிதந்து விளையாடுவேன்
உனது உயிர் கூட்டிலே
வெயில் பரவும் நொடியில்
உனது கைகள் விசிறி
எடுத்து வந்து வீசுதே
உளறுகிற எனது மொழியை
நல்ல கவிதை கவிதையென்று பேசுதே
உனது குறுஞ்சிரிப்பில் வானமே
உறவு மழை பொழிந்து போகுதே
உழுது விதைத்த அன்பு தாவரம்
உயிரை தொலைத்து கொண்டே நீளுதே
இதயமேஉறவிலே
நிறையுதேஹ்ம்ம்மம்ம்ம்
இதுவரையில் எனது உலகமென்று
பொழுதும் சுழலும் அன்பு தேசமே
குமரியென வளர்ந்த பிறகும் என்னை
சுமந்து திரிவதென்ன பாசமே
உனது நினைவு வந்து மோதினால்
ஒதுங்கி விடுவதென்ன தாய்மடி
உலக வரைபடத்தின் கோடுபோல்
எனக்கு தெரிவதுதான் காலடி
உறவிலேஉயருதே
உயிர்க்கொடிஓஹோஹஓஹோ
மயிலிறகு போல நான்
பொழுதும் இளங்காற்றிலே
மிதந்து விளையாடுவேன்
உனது உயிர் கூட்டிலே