Moongil Vittu

Moongil Vittu Song Lyrics In English


மூங்கில் விட்டு
சென்ற பின்னே அந்த
பாட்டோடு மூங்கிலுக்கு
உறவு என்ன

பெற்ற மகள்
பிரிகின்றாள் அந்தப்
பெண்ணோடு தந்தைக்குள்ள
உரிமை என்ன

காற்றைப் போல்
வெயில் ஒன்று வந்து
கடந்து போன பின் கை
காட்டி மரம் கொள்ளும்
தனிமை என்ன


மாயம் போல்
கலைகின்ற மனித
வாழ்க்கையில் சொந்தங்கள்
சொல்லிச்செல்லும் சேதி என்ன

பாசத்தின் ஊடாக
ஞானம் கொள்ள படைத்தவன்
புரிகின்ற சூழ்ச்சி என்ன