Moongil Vittu |
---|
மூங்கில் விட்டு
சென்ற பின்னே அந்த
பாட்டோடு மூங்கிலுக்கு
உறவு என்ன
பெற்ற மகள்
பிரிகின்றாள் அந்தப்
பெண்ணோடு தந்தைக்குள்ள
உரிமை என்ன
காற்றைப் போல்
வெயில் ஒன்று வந்து
கடந்து போன பின் கை
காட்டி மரம் கொள்ளும்
தனிமை என்ன
மாயம் போல்
கலைகின்ற மனித
வாழ்க்கையில் சொந்தங்கள்
சொல்லிச்செல்லும் சேதி என்ன
பாசத்தின் ஊடாக
ஞானம் கொள்ள படைத்தவன்
புரிகின்ற சூழ்ச்சி என்ன