Muthe Pavalame

Muthe Pavalame Song Lyrics In English


முத்தேபவழமே
முக்கனியேசர்க்கரையே
கொத்து மரிக்கொழுந்தே ஏ
கோமளமே கண் வளராய்

ஆளப் பிறந்த என் கண்மணியே
ஆளப் பிறந்த என் கண்மணியே
எந்தன் ஆசையை கேளடா வெண்மணியே

ஆளப் பிறந்த என் கண்மணியே
எந்தன் ஆசையை கேளடா வெண்மணியே

நாளொரு மேனியும் நீ வளர்ந்தே

நாளொரு மேனியும் நீ வளர்ந்தே
கலை ஞானத்தில் சேர்ந்திட வேண்டுமடா
நாளொரு மேனியும் நீ வளர்ந்தே
கலை ஞானத்தில் சேர்ந்திட வேண்டுமடா
சீலம் மிகுந்து எந்நாளும்
சீலம் மிகுந்து எந்நாளும்
சிந்தையில் நிலைப்பெற வேண்டுமடா

மக்கள் சிந்தையில் நிலைப்பெற வேண்டுமடா

ஆளப் பிறந்த என் கண்மணியே
எந்தன் ஆசையை கேளடா வெண்மணியே

ஆளப் பிறந்த என் கண்மணியே

ஏழை என் வீட்டுக்கு வந்தவனே

ஏழை என் வீட்டுக்கு வந்தவனே
இணையில்லாத ஆனந்தம் தந்தவனே
ஏழை என் வீட்டுக்கு வந்தவனே
இணையில்லாத ஆனந்தம் தந்தவனே
வாழைக் குருத்தென நீ வளர்ந்தே
வாழைக் குருத்தென நீ வளர்ந்தே
ஒரு வல்லவனாகிட வேண்டுமடா

ஒரு வல்லவனாகிட வேண்டுமடா

வாழப் பிறந்த என் கண்மணியே
சொல்லும் வார்த்தையை கேளடா பொன்மணியே


வாழப் பிறந்த என் கண்மணியே

பிள்ளைக்கலி தீர்த்த தெள்ளமுதே
ஆஅஆஆஆஆஆஆ

பிள்ளைக்கலி தீர்த்த தெள்ளமுதே
உந்தன் சொல்லே ஆணையாக வேண்டுமடா
பிள்ளைக்கலி தீர்த்த தெள்ளமுதே
உந்தன் சொல்லே ஆணையாக வேண்டுமடா
உள்ளம் குளிர இம்மண் மேலே
எந்தன் உள்ளம் குளிர இம்மண் மேலே
எல்லையில்லா புகழ் தேட வேண்டுமடா

எல்லையில்லா புகழ் தேட வேண்டுமடா

ஆளப் பிறந்த என் கண்மணியே
எந்தன் ஆசையை கேளடா வெண்மணியே

ஆளப் பிறந்த என் கண்மணியே

ஏழையாக என்றும் வாழ்ந்தாலும்
ஆஆஆஆஆஅ

ஏழையாக என்றும் வாழ்ந்தாலும்
ஒரு கோழையாக மட்டும் வாழாதே
ஏழையாக என்றும் வாழ்ந்தாலும்
ஒரு கோழையாக மட்டும் வாழாதே
உந்தன் வாழ்வின் கடமை மறவாதே
உந்தன் வாழ்வின் கடமை மறவாதே
தன்மானத்தை காக்கவும் தவறாதே

தன்மானத்தை காக்கவும் தவறாதே

வாழப் பிறந்த என் கண்மணியே
சொல்லும் வார்த்தையை கேளடா பொன்மணியே

வாழப் பிறந்த என் கண்மணியே