Muththaana Muththam |
---|
முத்தான முத்தம்
தந்தானே நித்தம்
அத்தானின் நெஞ்சம்
அன்பான மஞ்சம்
தன்னந் தனிமையில்
தத்தளிக்கும் தத்தையிடம்
பாடுகிறான் கவிதை
பொன்னான கன்னம்
புண்ணாகும் வண்ணம்
உன்னோடு இன்னும்
கொண்டாடும் எண்ணம்
தங்கச் சிலை இவள்
என் அருகில் வந்து நின்று
தேடுகிறாள் உறவை
வில்லெடுத்து அம்பெடுத்து
வஞ்சி என்னை வம்பிழுத்து
வெற்றி பெறும் கட்டழகன் நீதானோ
பொன்னான கன்னம்
புண்ணாகும் வண்ணம்
உன்னோடு இன்னும்
கொண்டாடும் எண்ணம்ம்ம்ம்ம்
ஏஹெஹெ
லால்ல லால்லா லால லல்லல் லா
லால லாலா லாலா லா
லால்ல லலலல லாலல் லல்ல லல்லா லல
ஆஹ ஹாஹாஹ ஹா
பூவரசம் பூவே
பூவின் தேரே
அடி பொன்மானே
ஆஹா ஓஹோ
ஆஹ ஹாஹஹா
நாவரசன் பாடும்
பாடல்தானே
அது செந்தேனே
கண்ணில் எழுதும்
கவிதை முழுதும்
புன்னகையில் பாலம் போடும்
கோலம்தான்
கையில் எழுத
ஏடு கொடுப்பாய்
உன் உடலில் தாகம் தீரும்
நேரம்தான்
வீணை மடியில்
விரலின் தயவில்
மெல்லிசையை கேட்கும்
யோகம் யோகம்தான்
வில்லெடுத்து அம்பெடுத்து
பொன் சிரிப்பில் வம்பிழுத்து
வெற்றி பெறும் கட்டழகி நீ தானோ
முத்தான முத்தம்
தந்தானே நித்தம்
அத்தானின் நெஞ்சம் அன்பான மஞ்சம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நீலகிரி மேலே உள்ளதாலே
அந்த வெயில் கூட
ஆஹா ஓஹோ ஆஹாஹா
அஹ ஹஹ ஹா
காதலனைப் போலே எந்தன் மேலே
வந்து விளையாட
பனியில் நனைந்து
வெயிலில் உலர்ந்து
பருவ சுகம் தேடும் போது
ஆனந்தம்
மாலை கொடுத்து
மஞ்சம் கொடுத்தால்
இரவு வர நானும்
அங்கு வாரேனே
காலை வரைக்கும்
மேனி துடிக்கும்
கதை எழுதும்
நாளை எண்ணி மகிழ்வேனே
வில்லெடுத்து அம்பெடுத்து
வஞ்சி என்னை வம்பிழுத்து
வெற்றி பெறும் கட்டழகன் நீ தானோ
முத்தான முத்தம்
தந்தானே நித்தம்
அத்தானின் நெஞ்சம் அன்பான மஞ்சம்
தன்னம் தனிமையில்
தத்தளிக்கும் தத்தையிடம்
பாடுகிறான் கவிதை
பொன்னான கன்னம்
புண்ணாகும் வண்ணம்
உன்னோடு இன்னும்
கொண்டாடும் எண்ணம்
தங்கச் சிலை இவள்
என் அருகில் வந்து நின்று
தேடுகிறாள் உறவை