Muthu Manasukule |
---|
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆ
ஆஅஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆ
முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா
மயிலே மயிலே
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா
மயிலே மயிலே
முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா
மயிலே மயிலே
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா
மயிலேமயிலே
அந்த ஆகாயம் இடம் மாறி போகாது
இந்த பூபாளம் ஸ்வரம் மாறி பாடாது
ஒரு மான உறங்க வைக்க
தேனக் கொழைச்சு தெனம்
நானே படிப்பேன் பாட்டு
முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா
மயிலே மயிலே
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா
மயிலே மயிலே
பூத்து குலுங்கும் இந்த
பொட்டு வச்ச வெண்ணிலவ
பொத்தி பொத்தி பாத்திடுவேன்
காத்து கமகமக்கும் கட்டழகு பெட்டகத்த
கண்ணில் வச்சி காத்திடுவேன்
அடி ஆத்தி சின்னப் பொண்ணு
உன்ன அச்சடிச்சு கண்ணுக்குள்ளே வச்சேனம்மா
அதுக்காக நெஞ்சுக்குள்ளே தெனம்
அன்பு எனும் நூலெடுத்து தெச்சேனம்மா
இது நானா படிக்கிற பாட்டு
நீயா புரிஞ்சுக்க கேட்டு
இது நானா படிக்கிற பாட்டு
நீயா புரிஞ்சுக்க கேட்டு
முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா
மயிலே மயிலே
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா
மயிலே மயிலே
ஆத்து மணலுக்குள்ளே
அள்ளுகிற கையுக்குள்ளே
ஊத்து சொறந்து வருமே
சேத்து கொளத்திலுள்ள
செம்பவள மொட்டு ஒண்ணு
காட்டில் மலர்ந்து விடுமே
ஒரு வார்த்தை சொல்லிப்புட்ட
நான் ஒத்தையிலே மாலை ஒண்ணு
பின்னிப்புட்டேன்
மறுவார்த்தை சொல்லும் முன்னே
உன்ன சொந்தமுன்னு பந்தமுன்னு
எண்ணிப்புட்டேன்
இது நானா படிக்கிற பாட்டு
நீயா புரிஞ்சுக்க கேட்டு
இது நானா படிக்கிற பாட்டு
நீயா புரிஞ்சுக்க கேட்டு
முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா
மயிலே மயிலே
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா
மயிலே மயிலே
அந்த ஆகாயம் இடம் மாறி போகாது
இந்த பூபாளம் ஸ்வரம் மாறி பாடாது
ஒரு மான உறங்க வைக்க
தேனக் கொழைச்சு தெனம்
நானே படிப்பேன் பாட்டு
முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா
மயிலே மயிலே
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா
மயிலே மயிலே