Naarpadhu Vayadhil

Naarpadhu Vayadhil Song Lyrics In English


நாப்பது வயதில் நாய் குணம்
அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம்
அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்

நாப்பது வயதில் நாய் குணம்
அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம்
அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்

நேரத்துக்கு ஒரு புத்தி இருக்கும்
நிமிஷத்துக்கு ஒரு பேச்சிருக்கும்
நேரத்துக்கு ஒரு புத்தி இருக்கும்
நிமிஷத்துக்கு ஒரு பேச்சிருக்கும்
எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும்
கண்ணில் எள்ளும் கொள்ளும் வெடிச்சிருக்கும்
எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும்
கண்ணில் எள்ளும் கொள்ளும் வெடிச்சிருக்கும்

நாப்பது வயதில் நாய் குணம்
அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம்
அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்

எல்லோர் வாழ்க்கையும் நாடகம்தான்
இருக்கிற வரையில் ஆடணும்தான்

எல்லோர் வாழ்க்கையும் நாடகம்தான்
இருக்கிற வரையில் ஆடணும்தான்
நாப்பதுதான் அதில் இடைவேளை
கொஞ்சம் நரையும் பிறையும் வரும்வேளை

நாப்பது வயதில் நாய் குணம்
அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம்
அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்

நாப்பது வந்தால் வெள்ளெழுத்து
அது யாருக்கும் உள்ள தலையெழுத்து

நாப்பது வந்தால் வெள்ளெழுத்து
அது யாருக்கும் உள்ள தலையெழுத்து
நீங்களும் நானும் கூட்டெழுத்து
இது ஆண்டவன் எழுதி போட்டெழுத்து


தாயார் சுமையோ சில மாதம்
தகப்பன் சுமையோ பல காலம்
தாயார் சுமையோ சில மாதம்
தகப்பன் சுமையோ பல காலம்
சுமப்பவன் தானே சம்சாரி
இதை சுமையாய் நினைப்பவன் சந்நியாசி

நாப்பது வயதில் நாய் குணம்
அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம்
அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்

ஆண்டவன் சலிச்சால் படைப்பேது
ஆருயிர்க்கெல்லாம் பிழைப்பேது

ஆண்டவன் சலிச்சால் படைப்பேது
ஆருயிர்க்கெல்லாம் பிழைப்பேது
வீட்டுக்கு வீடு வாசப்படி
இதை உணர்ந்தே வாழணும் நல்லபடி

குடும்பத்தை நீங்க நேசிக்கணும்
குழந்தைங்க கூட பேசிக்கணும்
கோபத்தை கொஞ்சம் அடக்கிக்கணும்
நீங்க கொல்லுனு சிரிச்சிட பழகிக்கணும்

அனைவரும் : ஹஹஹஹஹா

நாப்பது வயதில் நாய் குணம்
அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம்
அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்