Naattamai Ponnu |
---|
இசை அமைப்பாளர் : சங்கீதா ராஜன்
தாம்த தீம்த தீம்த தானாம்
தந்தனனா தந்தனனாஹா ஹாங்
நாட்டமை பொண்ணு
நான்தான்டா கண்ணா
தீம்த தகதிமிதாம்
என்னை நையாண்டி பண்ண
நீ யாரு இங்கே
தீம்த தகதிமிதாம்
என்னோட மோதாதே
நான் காசால ஜெயிப்பேன்டா
நீ வீணாக மொறைக்காதே
உன் வீராப்ப குறைப்பேன்டா
தென்னாட்டுல பொறந்து
நான் நாடு விட்டு நாடு பறந்து
நாகரீகம் கற்று வந்தவ
நாட்டமை பொண்ணு
நான்தான்டா கண்ணா
தீம்த தகதிமிதாம்
என்னை நையாண்டி பண்ண
நீ யாரு இங்கே
தீம்த தகதிமிதாம்
ஏத்தம் எரைக்கலாம்ஆஆஆஆஆ
ஏத்தம் எரைக்கலாம் ஏறிப் பறிக்கலாம்
ஆட்ட மேய்க்கிறவன்
லாலா லாலா
எங்க ஊருல எருமை குளிக்கல
இவன பார்த்ததிலே
லாலா லாலா
எப்போதும் நான்தான் அட
எப்போதும் நான்தான் ராணி இங்கே
எந்நாளும் நீ வந்து வேலை செய்ய
அம்மாடி காலம் எங்கப் பக்கம்
அய்யாவ பாருஅய்யோ பாவம்
தீம்ததகதீம்தா
தீம்ததகதீம்தா
போங்கடீ
கொண்டயில்லா கோழிகளே
கொக்கரிச்சு வந்தீகளே
ஜல்லிக்கட்டு காளை நாங்க
மல்லுக்கட்டி பாக்காதீங்க
ஆண் அடிங்கடி தொடுங்கடி
கிட்ட வந்து பாருங்கடி
முட்ட வரும் காளை நாங்க
தொட்டு தொட்டு பாடுங்கடி
ஓலக் குடிசையிலேஏ ஏ ஏ ஏ ஏ
ஓலக் குடிசையில கூழக் குடிக்கிறவன்
நாடாளும் காலமடி
லாலாலா
ஏதோ படிச்சதில கூந்தல் குறைந்தடி
பெண் தானா சந்தேகம்
லாலாலாலா
மாராப்பு எங்கேஅடி மாராப்பு எங்கே
என் மைனாக்களே
காப்பாத்த இங்கே யாருமில்ல
மேல்நாட்டு படிப்பு என்னாச்சுடி அடி
தென்னாட்டு பண்பாடு பொன்னானது
தீம்ததகதீம்தாம்
தகிடதோம்
தீம்ததகதீம்தாம்
திகு திகு திகு திகு
பாட்டாளி மகன்தான்
நான்தான்டி புள்ள
தீம்ததகதீம்தாஆமா
ஹோய் என்ன நாட்டாம பண்ண
நீ யாரு இங்க
தீம்ததகதீம்தாம்
அடி பொன்னான பூமேனி புண்ணாகி போவேணா
வீண் வம்பு இழுக்காதே அடி வான்கோழி பறக்காதே