Nambikkaiye Manithanathu

Nambikkaiye Manithanathu Song Lyrics In English


பாடலாசிரியர் : கண்ணதாசன்

நம்பிக்கையே மனிதனது சாதனம் அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம் நம்பிக்கையே மனிதனது சாதனம் அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம் அது தன் பலத்தில் நிற்க வைக்கும் ஒருவரை நாம் சந்திக்கிறோம் சரித்திரத்தில் வீரர்களை நாம் சந்திக்கிறோம் சரித்திரத்தில் வீரர்களை

நம்பிக்கையே மனிதனது சாதனம் அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்

உலகை வெல்லத் துணிந்தான் வான் ஊர்தி கொண்டு பறந்தான் உலகை வெல்லத் துணிந்தான் வான் ஊர்தி கொண்டு பறந்தான்

கலகம் செய்த போதும் அவன் கடமையையே நினைத்தான் கலகம் செய்த போதும் அவன் கடமையையே நினைத்தான்

தனது நாட்டு மக்கள் தினம் தலை நிமிர்ந்து நிற்க கனவு கண்டு கனவு கண்டு கர்ஜனைகள் செய்தான்

நம்பிக்கையே மனிதனது சாதனம் அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்

அஞ்சியதும் இல்லை அவன் கெஞ்சியதும் இல்லைஈஈ அஞ்சியதும் இல்லை அவன் கெஞ்சியதும் இல்லை தன்னை அடக்க வந்த எதிரியிடம் கொஞ்சியதும் இல்லை

உங்களைப் போல் இருப்பான் அவன் உங்களைப் போல் சிரிப்பான் உங்களைப் போல் இருப்பான் அவன் உங்களைப் போல் சிரிப்பான் ஆனால் உங்களைப் போல் பயந்து வாழும் மனிதர்களை வெறுப்பான்


நம்பிக்கையே மனிதனது சாதனம் அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்

காலடியை எடுத்தால் அது கல்லின் மீதும் விழலாம் கல்லைக் கண்டு பயந்து விட்டால் காலமெல்லாம் அழலாம்

நீரின் மீது நடந்து அந்த நெருப்பினிலே குளித்து ஊர் புகழ வாழ வேண்டும் வள்ளுவனைப் படித்து

நம்பிக்கையே மனிதனது சாதனம் அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்

ஔவை போல நானும் ஏதோ ஆனவரை சொன்னேன் ஔவை போல நானும் ஏதோ ஆனவரை சொன்னேன் சொன்னதிலே தவறிருந்தால் மன்னியுங்கள் கண்ணா

நமது இல்லம் வாழ நாளை நமது பிள்ளை வாழ நடந்து செல்லும் கால்களுக்கு துணிவு தந்தேன் கண்ணா

நம்பிக்கையே மனிதனது சாதனம் அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம் அது தன் பலத்தில் நிற்க வைக்கும் ஒருவரை நாம் சந்திக்கிறோம் சரித்திரத்தில் வீரர்களை