Navaraathiri Subha Raathiri |
---|
இசை அமைப்பாளர் : கே வி மஹாதேவன்
நவராத்திரி சுபராத்திரி
நவராத்திரி சுபராத்திரி
அலை மகளும் கலை மகளும்
கொலுவிருக்கும் ராத்திரி
அலை மகளும் கலை மகளும்
கொலுவிருக்கும் ராத்திரி
மலை மகளும் சேர்ந்து நம்மை
மகிழ வைக்கும் ராத்திரி
மலை மகளும் சேர்ந்து நம்மை
மகிழ வைக்கும் ராத்திரி
நவராத்திரி சுபராத்திரி
நவராத்திரி சுபராத்திரி
கவிஞர் நெஞ்சில் கற்பனைகள்
ஊறுவதும் ராத்திரி
கவிஞர் நெஞ்சில் கற்பனைகள்
ஊறுவதும் ராத்திரி
கலைஞரெல்லாம் அரங்கத்திலே
சேருவதும் ராத்திரி
கலைஞரெல்லாம் அரங்கத்திலே
சேருவதும் ராத்திரி
நாள் முடிந்து தொடங்கும் இடம்
நடு ராத்திரி
இள நங்கையர்கள் போற்றுவதும்
நவராத்திரி
நாள் முடிந்து தொடங்கும் இடம்
நடு ராத்திரி
இள நங்கையர்கள் போற்றுவதும்
நவராத்திரி
நவராத்திரி சுபராத்திரி
நவராத்திரி சுபராத்திரி
தூக்கமில்லா மனிதரையும்
தூங்க வைக்கும் ராத்திரி
தூக்கமில்லா மனிதரையும்
தூங்க வைக்கும் ராத்திரி
சுழன்று வரும் பூமிக்கென்றும்
அமைதி தரும் ராத்திரி
சுழன்று வரும் பூமிக்கென்றும்
அமைதி தரும் ராத்திரி
காளையர்க்கு ஓரிரவு சிவராத்திரி
ஆனால் கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி
காளையர்க்கு ஓரிரவு சிவராத்திரி
ஆனால் கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி
நவராத்திரி சுபராத்திரி
நவராத்திரி சுபராத்திரி