Neduvazhi |
---|
நெடுவழி விளக்கே
நடுவினில் அணைந்து
உன்னை பிரிந்தேனே நான்
தனியாக
சுடுவழி மணலில்
நடந்திடும் உயிராய்
உடன் வந்தாயே
நீ துணையாக
உறவு பந்தம் எல்லாம் இங்கு
உன்னால்தானே வந்தது
எலும்பு இதயம் இத்தனையும்
நீதானப்பா தந்தது
நெடுவழி விளக்கே
நடுவினில் அணைந்து
உன்னை பிரிந்தேனே நான்
தனியாக
மாடறுத்து
நீ வந்த கோலம்
கண்ணில் மறையல
கோவம் கலைந்து தேடிய இரவில்
உன் தவிப்பு மறக்கல
பனங்காவில் லாரி செஞ்சு
தந்த பாசம் மறக்கல
பள்ளிகூடத்தில் நீ விட்டு வந்த
பார்வை செறிக்கல
உறவு பந்தம் எல்லாம் இங்கு
உன்னால்தானே வந்தது
எலும்பு இதயம் இத்தனையும்
நீதானப்பா தந்தது
நெடுவழி விளக்கே
நடுவினில் அணைந்து
உன்னை பிரிந்தேனே நான்
தனியாக
நீ இல்லைன்னு இன்னும்கூட
சரியாய் நம்பள
உன் செருப்புல பொத்த முள்ளு
கூட போட மனசில்ல
சோறெடுத்து நீ வந்த வெல்லம்
நெனப்பில்தானே மெதக்குது
சாராய முத்தம் தொலையாம
இன்னும் மூக்கில் நிக்குது
உறவு பந்தம் எல்லாம் இங்கு
உன்னால்தானே வந்தது
எலும்பு இதயம் இத்தனையும்
நீதானப்பா தந்தது
நெடுவழி விளக்கே
நடுவினில் அணைந்து
உன்னை பிரிந்தேனே நான்
தனியாக
சுடுவழி மணலில்
நடந்திடும் உயிராய்
உடன் வந்தாயே
நீ துணையாக