Nee Aandavana

Nee Aandavana Song Lyrics In English


ம்ம்ம்ஹும்ம்ம்ம்ஹும்
ம்ம்ம்ஹும்ம்ம்ம்ஹும்

நீ ஆண்டவனா
தாய் தந்தைதான் உனக்கில்லையே
கண்ணா நான் உன் ஜாதிதான்
உறவென்பதே எனக்கில்லையே
கண்ணீர் என்ன கண்ணா
அட நான் உன் மாமனே
மண்ணில் வந்ததாலே
நீ மண்ணின் மைந்தனே

தாய் பாஷை அறியாத
புது இந்தியன்
நீ என்றால் பொய்யில்லையே
தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய்
உன் போலே ஊரில்லையே

ம்ம்ம்ஹும்

இதழோரம் ஆயிரம்
சிறு பூக்கள் பூக்கிறாய்
ஒரு கண்ணால் பார்க்கிறாய்
ஒதுக்கீடு கேட்கிறாய்
தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே

ம்ம்ம்ஹும்

பாலூட்டிட வழி இல்லை
அதுதான் குறையே
உந்தன் சோகம் சொன்னால்
ஏக்கம் போய்விடும்
எங்கள் சோகம் சொன்னால்
உன் தூக்கம் போய்விடும்

நீ ஆண்டவனா
தாய் தந்தைதான் உனக்கில்லையே
கண்ணா நான் உன் ஜாதிதான்
உறவென்பதே எனக்கில்லையே

கண்ணீர் என்ன கண்ணா
அட நான் உன் மாமனே

மண்ணில் வந்ததாலே
நீ மண்ணின் மைந்தனே

ஆரோ ஆரோ ஆரோ ஆராராரோ
ஆரோ ஆரோ ஆரோ ஆரீராரோ


கலைகின்ற மேகங்கள்
சபை கூடியே
வான் வெளியை தாலாட்டுதே

கரைகின்ற பிறை ஐந்து
கை வீசியே
சூரியனை தாலாட்டுதே

ஆஅஹஆ

முடியாத யாத்திரை
முடிகின்ற வேளையில்
முத்தங்கள் தந்து நீ
முள் ஆனாய் சேலையில்

நீ என்பது
எம் வாழ்வில் வரவா செலவா
முள் என்பது ரோஜாவில்
உறவா பகையா

காலம் செய்த கோலம்
நீ இங்கே வந்தது
கண்ணீரோடு வந்து
கண்ணீர் சேர்ந்தது

நீ ஆண்டவனா
தாய் தந்தைதான் உனக்கில்லையே

கண்ணா நான் உன் ஜாதிதான்
உறவென்பதே எனக்கில்லையே

கண்ணீர் என்ன கண்ணா
அட நான் உன் மாமனே

அனைவரும் : மண்ணில் வந்ததாலே
நீ மண்ணின் மைந்தனே