Nee Ondru Dhaana

Nee Ondru Dhaana Song Lyrics In English


நீ ஒன்று தானா
என் சங்கீதம்
பிலஹரி நீ ஒன்று தானா
என் சங்கீதம்

குருவி தோளில்
இமயம் இல்லை
குடத்து நீரில் கடலும் இல்லை
வானின் எல்லை ஜாடில் இல்லை
நீ ஒன்று தானா
என் சங்கீதம்

போக போக போகும் வானம்
பாட பாட நீளும் ராகம்
போக போக போகும் வானம்
பாட பாட நீளும் ராகம்

சமுத்திரத்தை மூட
பந்தல் போடவா
எனக்குள் எல்லாம் என்னும்
எண்ணம் ஆகுமா

இசைக்கு நீ அடக்கமா
உனக்கது அடங்குமா
இசைக்கு நீ அடக்கமா
உனக்கது அடங்குமா
நீ ஒன்று தானா
என் சங்கீதம்

இசைக்குள் கிடந்து
மயங்கும் சக்ரவாஹம்
மனதில் நெருப்பை வளர்க்கும்
ராக யாகம்

நானும் நீயும் தந்ததல்ல
யாரை பார்த்தும் வந்ததல்ல
நீயின்றி நான் உண்டு

பூதம் ஐந்து நாதம் கோடி
நானும் அந்த வானம்பாடி
பூதம் ஐந்து நாதம் கோடி
நானும் அந்த வானம்பாடி

பறந்து நிற்கும்
அந்த வானம் போன்றது
இறந்த பின்னும்
என்னை வாழ வைப்பது

இசை தமிழ் நிரந்தரம்
எனக்கது வரம் தரும்
இசை தமிழ் நிரந்தரம்
எனக்கது வரம் தரும்
நீ ஒன்று தானா
என் சங்கீதம்


ம க ப த
நீ ஒன்று

ச ரி க ரி க ப
க ப த
நீ ஒன்று

ச ரி க ரி க ப
ம க ப ட ம க ரி
ரி க ப க ப ட
ம க ப ட – ட ரி
நீ ஒன்று

ப ட ப க ப ட ரி ச
ரி க ரி ச நி ட ப ட
ட ச ரி க
ப ட ச ரி
க ப ட ச
ரி க ச ரி
ச ரி க ப ட ரி
நீ ஒன்று

ச ரி க ப ம க ரி க
ப ம க ரி சா ச
ச சா ரி ரி
ச நி ட
ச நி ட

ப ம க
ப ம க

ரி க ப ம க ரி ச நி ட ப ச
ரி க ரி ச நி ட ப ம க
க ம ட
ட நி ச நி ட
ரி க ப ட
ரி க ப ட ச ரி
நீ ஒன்று தானா
என் சங்கீதம்

குருவி தோளில்
இமயம் இல்லை
குடத்து நீரில் கடலும் இல்லை
வானின் எல்லை ஜாடில் இல்லை
நீ ஒன்று தானா
என் சங்கீதம்