Nee Pogum Padhaiyil

Nee Pogum Padhaiyil Song Lyrics In English


நீ போகும் பாதையில்
மனசு போகுதே மானே

நீ போகும் பாதையில்
மனசு போகுதே மானே
நீ போகும் பாதையில்
மனசு போகுதே மானே

நீ நடந்து போகையில்
பாதம் நோகுமே
பூவப் போட்டுத் தாரேன்
அதில் நடந்து வாடி மானே
பூவப் போட்டுத் தாரேன்
அதில் நடந்து வாடி மானே

நீ போகும் பாதையில்
மனசு போகுதே ராசா
நீ போகும் பாதையில்
மனசு போகுதே ராசா

நீ நடந்து போகையில்
பாதம் நோகுமே
பூவப் போட்டுத் தாரேன்
அதில் நடந்து வாங்க ராசா
பூவப் போட்டுத் தாரேன்
அதில் நடந்து வாங்க ராசா

வானத்துல பூத்திருக்கும்
வைரமணிப் பூ எடுத்து
மாலை ஒண்ணு நான் தொடுத்து
ஓங்கழுத்தில் போடவா

பாதத்துக்கு ஓர் கொலுசு
வைரத்துல போடவா
மீதம் வரும் வைரங்கள
மின்மினிக்குச் சூடவா

ஆகாயத்தில் கோட்டை கட்டி
அரண்மனையை கட்டி அங்கே
காவலுக்கு தெய்வங்கள
போட உன்னால் ஆகாதையா

ஆசை கொண்டது
அன்பினாலதான்
அன்புதானே நம் செல்வம்
அந்த அன்பு ஒண்ணுதான்
நம்மச் சேர்த்தது

போதும் போதும் ராசா
அது ஒண்ணு போதும் ராசா
போதும் போதும் மானே
அது ஒண்ணு போதும் மானே


பள்ளிக்கூடம் போனதில்லை
பாடமும் படிச்சதில்லை
சொல்லி யாரும் கொடுக்கவில்லை
சொந்த புத்தி ஏதும் இல்லை

என்னைப் போல ஆம்பளைய
பாத்துக் கொள்ள யார் இருக்கா
ஒன்னைப் போல பொம்பளைக்கு
எத்தனையோ பேர் இருக்கா

சொன்னதையே சொல்லும் அய்யா
பச்சக் கிளிப் பிள்ளை அது
சொன்னதை நீ சொல்வதில்ல
ரெட்டச் சுழிப் பிள்ளை இது

அறிவுக்காகத்தான்
பாடம் கேக்கணும்
அன்பு கொள்ள அது வேணாமே

நல்ல மாலை வந்தது
வேளை வந்தது
மனசு சேர்ந்ததாலே
நம்ம மனசு சேர்ந்ததாலே

நீ போகும் பாதையில்
மனசு போகுதே மானே
நீ போகும் பாதையில்
மனசு போகுதே மானே

நீ நடந்து போகையில்
பாதம் நோகுமே
பூவப் போட்டுத் தாரேன்
அதில் நடந்து வாங்க ராசா

பூவப் போட்டுத் தாரேன்
அதில் நடந்து வாடி மானே