Nee Tholai Thoorathil

Nee Tholai Thoorathil Song Lyrics In English


நீ தொலை
தூரத்தில் உன்னை
நான் தேடினேன் ஏன்
கனவாகினாய் எந்தன்
வாழ்விலே

நீ தொலை
தூரத்தில் உன்னை
நான் தேடினேன் ஏன்
கனவாகினாய் எந்தன்
வாழ்விலே

என் கண்கள்
எல்லாம் நீர் வழிகின்றதே
எந்தன் நெஞ்சில் வலி
கூடுதே

குறிஞ்சி பூவே
நீ எனக்கில்லையே
இருந்தும் மனம்
தவிக்கின்றதே

ஒவ்வொரு
அசைவிலும் காதலை
சொன்னேன் உனக்கது
புரியவில்லை புரிந்தும்
ஏனோ விலகி சென்றாய்
உனக்குள் நான்
இல்லையா

என்னை நீ தான்
ஏங்க வைத்தாய் அருகில்
இல்லை நீ தொலைந்தாய்
நீ உன்னை தேட மலர்
வாடுதே

தேடிய மலர்களும்
எங்கோ சென்று பூத்ததே
பேசிய வார்த்தைகள்
கனவாய் போனது


உன் நினைவால்
என்னை வதைத்தேன்
நினைவே உயிரை
தின்றது உடல் மட்டும்
தான் கிடக்கின்றேன்
உயிரே நீ இல்லை

என் கண்கள்
எல்லாம் நீர் வழிகின்றதே
எந்தன் நெஞ்சில் வலி
கூடுதே

குறிஞ்சி பூவே
நீ எனக்கில்லையே
இருந்தும் மனம்
தவிக்கின்றதே

நீ தொலை தூரத்தில்
தூரத்தில்
உன்னை நான் தேடினேன்
தேடினேன்
ஏன் கனவாகினாய்
கனவாகினாய்
எந்தன் வாழ்விலே
வாழ்விலே