Netru Varai Nee Yaaro

Netru Varai Nee Yaaro Song Lyrics In English


நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் இங்கே

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே

நேரிலே பார்த்தால் என்ன
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன
பூ முகம் சிவந்தா போகும்

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ


பாவை உன் முகத்தை கண்டேன்
தாமரை மலரை கண்டேன்
பாவை உன் முகத்தை கண்டேன்
தாமரை மலரை கண்டேன்

கோவை போல் இதழை கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
கோவை போல் இதழை கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்

வந்ததே கனவோ என்று
வாடினேன் தனியே நின்று
வண்டு போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னை கண்டு

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் இங்கே

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ