Nyabagam Illaiyo Duet |
---|
ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே
துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே
அன்று நடந்ததும் இன்று மறந்ததோ
பொன் மானே ஏனோ
ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
புள்ளி வைத்த வானில் கோலம் இடப் போனேன்
நெற்றியில் பொட்டை வைத்து நீ அழைத்தாய்
துள்ளி வந்து காதல் தூது விடப் போனே
தோள்களை தொட்டு என்னை நீ அணைத்தாய்
ஒரு நாளும் மறவாத உள்ளம் நீ எங்கே
பிரிவாலே உயிர் வாடும் பேதை நான் இங்கே
உந்தன் ராகமும் எந்தன் கீதமும்
ஒன்று சேருமா இந்த நினைவுகள் உனக்கே
ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே
துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே
அன்று நடந்ததும் இன்று மறந்ததோ
பொன் மானே ஏனோ
ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
வஞ்சி மயில் இங்கே அஞ்சுவதும் ஏனோ
வாழ்வினில் பெய்யும் இன்பத் தேன் மழையே
பிஞ்சு மனம் தேடும் நெஞ்சம் ஒன்று கூடும்
பேதையின் சோகம் இங்கு நீரலையே
உயிர் பாதி இது நீதி உள்ளம் மாறாது
துயர் தீரும் சுகம் சேரும் தோகை நோகாது
புள்ளி மானுடன் பிள்ளை போலவே
துள்ளி ஆடினோம் அந்த நினைவுகள் உனக்கே
ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே
துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே
அன்று நடந்ததும் இன்று மறந்ததோ
பொன் மானே ஏனோ
ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்