Nyabagam Illaiyo Duet

Nyabagam Illaiyo Duet Song Lyrics In English


ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே
துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே
அன்று நடந்ததும் இன்று மறந்ததோ
பொன் மானே ஏனோ

ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்

புள்ளி வைத்த வானில் கோலம் இடப் போனேன்
நெற்றியில் பொட்டை வைத்து நீ அழைத்தாய்
துள்ளி வந்து காதல் தூது விடப் போனே
தோள்களை தொட்டு என்னை நீ அணைத்தாய்
ஒரு நாளும் மறவாத உள்ளம் நீ எங்கே
பிரிவாலே உயிர் வாடும் பேதை நான் இங்கே
உந்தன் ராகமும் எந்தன் கீதமும்
ஒன்று சேருமா இந்த நினைவுகள் உனக்கே

ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்

ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே
துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே
அன்று நடந்ததும் இன்று மறந்ததோ
பொன் மானே ஏனோ


ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்

வஞ்சி மயில் இங்கே அஞ்சுவதும் ஏனோ
வாழ்வினில் பெய்யும் இன்பத் தேன் மழையே
பிஞ்சு மனம் தேடும் நெஞ்சம் ஒன்று கூடும்
பேதையின் சோகம் இங்கு நீரலையே
உயிர் பாதி இது நீதி உள்ளம் மாறாது
துயர் தீரும் சுகம் சேரும் தோகை நோகாது
புள்ளி மானுடன் பிள்ளை போலவே
துள்ளி ஆடினோம் அந்த நினைவுகள் உனக்கே

ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
அல்லிக் குளத்தின் கரை அருகே அருகே அருகே
துள்ளித் திரிந்தோம் என் அழகே அழகே அழகே
அன்று நடந்ததும் இன்று மறந்ததோ
பொன் மானே ஏனோ

ஞாபகம் இல்லையோ
என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
காதலின் எல்லையோ
கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்