O Malliyakka O Rojakka

O Malliyakka O Rojakka Song Lyrics In English


ஓஓஓ ஓஓஓ ஓஓமல்லியக்கா

ஓஓஓ ஓஓஓ ஓஓஏன்டி ரோஜா அக்கா

மல்லியக்கா மல்லியக்கா எங்கடி போறே
கொஞ்சம் சொல்லடியக்கா
எதுக்கு இப்படி குலுக்கி நடக்குறே

மல்லியக்கா மல்லியக்கா எங்கடி போறே
கொஞ்சம் சொல்லடியக்கா
எதுக்கு இப்படி குலுக்கி நடக்குறே

நான் மணவறையைச் சிங்காரிச்சு
வாசனையை அள்ளித் தெளிச்சு
வாரவங்க எல்லோரையும் மயக்கப் போறேன்
நான் மயக்கப் போறேன்
புது மணப்பொண்ணு கூந்தலிலே
மணக்கப் போறேன்

நீ மணப்பொண்ணு தலையில் மட்டும்
மணக்கப்போறே
நான் மாப்பிள்ளை கழுத்தச்சுத்தி
தொங்கப் போறேன்
நீ மணப்பொண்ணு தலையில் மட்டும்
மணக்கப்போறே
நான் மாப்பிள்ளை கழுத்தச்சுத்தி
தொங்கப் போறேன்

நீ வாசனையைக் கொடுத்துப்புட்டு
வதங்கப் போறே
இங்கே வாரவங்க கையில் எல்லாம்
சுருங்க போறேன் அஹ்ஹா சுருங்க போறே

இருவர் : அடி தந்தனத் தான
தந்தனத் தான
சரக்கிது தானா
உன் தரத்துக்கும் உள்ள குணத்துக்கும்
நான் குறைஞ்சு போனேனா

கள்ளமில்லா மனசுக்கென்னை
உவமை சொல்வாங்க
பெரும் கவிஞரெல்லாம் காவியத்தில்
இடம் கொடுப்பாங்க
கள்ளமில்லா மனசுக்கென்னை
உவமை சொல்வாங்க
பெரும் கவிஞரெல்லாம் காவியத்தில்
இடம் கொடுப்பாங்க

காத்தடிச்சா போதும்
என்னைக் காணத் துடிப்பாங்க
காத்தடிச்சா போதும் என்னைக்
காணத் துடிப்பாங்க
உன்னை கண்டாக்கூட
முள்ளை நெனச்சு முகம் சுளிப்பாங்க ஓ ஓ ஓஓ

இருவர் : அடி தந்தனத் தானா
தந்தனத் தானா
சரக்கிது தானா
உன் தரத்துக்கும் உள்ள குணத்துக்கும்
நான் குறைஞ்சு போனேனா

நீ மலரும் முன்னே
கடைக்கு வந்து
மலரும் முன்னே கடைக்கு வந்து
மல்கி போறவ

நீ உலரு முன்னே
தொட்டாக்கூட
நீ உலரு முன்னே தொட்டாக்கூட
உதிர்ந்து போறவ

ஓஹ்ஹோ
நீ வளரும் போதே கொம்பைத் தேடிப் புடிச்சவ
நீ வளரும் போதே கொம்பைத் தேடிப் புடிச்சவ

அதுக்கு வகையில்லாம
தனிச்சு நின்னு தவிச்சவ
அதுக்கு வகையில்லாம
தனிச்சு நின்னு தவிச்சவ
ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ

இருவர் : அடி தந்தனத் தான
தந்தனத் தான
சரக்கிது தானா
உன் தரத்துக்கும் உள்ள குணத்துக்கும்
நான் குறைஞ்சு போனேனா


தங்கச்சி தங்கச்சி
தாமரைத் தங்கச்சி
எங்களுக்குள்ளே எவதான் சிறந்தவ
எடுத்துச் சொல்லடி தங்கச்சி

தங்கச்சி தங்கச்சி
தாமரைத் தங்கச்சி
எங்களுக்குள்ளே எவதான் சிறந்தவ
எடுத்துச் சொல்லடி தங்கச்சி

மலருவதெல்லாம் உலருவதுண்டு
மறந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி
சில மனிதரைப் போல வம்புகள் பேசி
தெரிந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி

மலருவதெல்லாம் உலருவதுண்டு
மறந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி
சில மனிதரைப் போல வம்புகள் பேசி
தெரிந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி

உலகில் சிறந்தது என்ன

அன்பு உள்ளவர் செய்திடும் தானம்
அந்த தானத்தில் சிறந்தது என்ன

நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்

உலகில் சிறந்தது என்ன

அன்பு உள்ளவர் செய்திடும் தானம்
அந்த தானத்தில் சிறந்தது என்ன

நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்

அதிலும் சிறந்தது என்ன

பல அஹிம்சா மூர்த்திகள்
ஆராய்ந்து சொன்ன
உலக சமாதானம் உலக சமாதானம்
பல அஹிம்சா மூர்த்திகள்
ஆராய்ந்து சொன்ன
உலக சமாதானம் உலக சமாதானம்

அதை நாம் உணர்ந்து நடக்க வேணும்
எல்லோரும் ஒன்றாய் இருக்கவேணும்
அதை நாம் உணர்ந்து நடக்க வேணும்
எல்லோரும் ஒன்றாய் இருக்கவேணும்
அப்போதுதான் உலவும் சமாதானம்
எங்கும் நிலவும் சமாதானம்
சமாதானம் சமாதானம்

அனைவரும் : அதை நாம் உணர்ந்து நடந்திடுவோம்
எல்லோரும் ஒன்னாய் இருந்திடுவோம்
அதை நாம் உணர்ந்து நடந்திடுவோம்
எல்லோரும் ஒன்னாய் இருந்திடுவோம்