O Manida Jaathiye

O Manida Jaathiye Song Lyrics In English


ஓ மானிட ஜாதியே
மனிதர்களே நீங்கள்
தேவர்கள் ஆகலாம்
மதுவிருந்தால் போதும்ம்ம்
மங்கையரே நீங்கள்
தேவதை ஆகலாம்
மனமிருந்தால் போதும்ம்

மதி இருந்தால்
போதும் அன்று
மது இருந்தால் போதும் இன்று
எது இருந்தால் போதும்
மது இருந்தால் போதும்

உலகத்தின் வயதுகள்
பலகோடி
அதில் உருண்டவர்
புரண்டவர் பலகோடி
உங்களின் இருப்பிடமோ ஒரு கோடி
உயிர் ஓடிவிட்டால்
பின்னர் வருமோடி
வருமோடி


மாலையில்
சூரியன் குளிக்கின்றது
அது மதுவை கடலிலே குடிக்கின்றது
மாலையில் சூரியன் குளிக்கின்றது
அது மதுவை கடலிலே குடிக்கின்றது
காலை வரை குடித்து சிவக்கின்றது
என் கண்களும்
அதுபோல் இருக்கின்றது

ஹாஹாஹா
எல்லாரும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்கோ