O Sathiye |
---|
ஓ சத்தியே
ஓ சத்தியே நெஞ்சே
உன் காதல் குரல்
என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல்
காற்றில் போகுதே
ராசாத்தியே
ராசாத்தியே அன்பே
என் தீண்டும் விரல்
உன்னை கேட்குதே
மழை காலம் கூட
தீயை மூட்டுதே
ஓ சத்தியே
ஓ சத்தியே நெஞ்சே
உன் காதல் குரல்
என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல்
காற்றில் போகுதே
எண்ணத்தில்
உன்னையே காட்சியாய்
மாற்றினேன் என்னையே
என்னை நான் தேற்றுவதா
வார்த்தையில்
ஆயிரம் மௌனங்கள்
சேர்க்கின்றேன் மௌனத்தை
மௌனமே மாற்றிடுமா
ராசாத்தியே
ராசாத்தியே அன்பே
என் தீண்டும் விரல்
உன்னை கேட்குதே
மழை காலம் கூட
தீயை மூட்டுதே
ஒரு ஒரு
ஒரு ஒரு சொல்லினாலே
உயிர் வரை உயிர் வரை
செல்வாயே சிறு சிறு சிறு
சிறு பிள்ளை போலே
விரும்பிடும் கதைகளை
சொல்வாயே
ஒரு மாலை
சூரியன் தீர்ந்திடுமா
அந்த காலை தாமரை
சாய்ந்திடுமா
சிறு பிரிவுகள்
உறவினை மாற்றிடுமா
அந்த நிலவினை இரவு
விழுங்கிடுமா
உன் சிரிப்பின்
நினைவில் உறங்கும்
விழிகள் உறக்கம்
தழுவவில்லை
ஓ சத்தியே
ஓ சத்தியே நெஞ்சே
உன் காதல் குரல்
என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல்
காற்றில் போகுதே
ஒரு ஒரு
ஒரு ஒரு சொல்லினாலே
உயிர் வரை உயிர் வரை
செல்வாயே சிறு சிறு சிறு
சிறு பிள்ளை போலே
விரும்பிடும் கதைகளை
சொல்வாயே