O Vennila |
---|
இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரகுமான்
ஓ வெண்ணிலா
இரு வானிலா நீ
ஓ நண்பனே
அறியாமலாநான்
கண்ணே கண்ணே
காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே
நீயென் செய்வாய்
ஓ வெண்ணிலா
இரு வானிலா நீ
மழை நீரில் வானம்
நனையாதம்மா
விழி நீரில் பூமுகம்
கரையாதம்மா
எனைக் கேட்டு
காதல் வரவில்லையே
நான் சொல்லி
காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம்
மறக்காதம்மா
இறந்தாலும் காதல்
இறக்காதம்மா
ஓ வெண்ணிலா
இரு வானிலா நீ
இருக்கின்ற இதயம்
ஒன்றல்லவா
எனதல்ல அதுவும்
உனதல்லவா
எதை கேட்ட போதும்
தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய்
விட கூடுமே
தருகின்ற பொருளாய்
காதல் இல்லை
தந்தாலே காதல்
காதல் இல்லை
ஓ வெண்ணிலா
இரு வானிலா நீ
ஓ நண்பனே
அறியாமலாநான்
கண்ணே கண்ணே
காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே
நீயென் செய்வாய்