Odugindral

Odugindral Song Lyrics In English


உன் பேர் சொல்லும் பெண் ஜென்மம்
பித்தென்றும் பேய் என்றும்
ஊர் சொல்லும் காரணத்தை
யார் சொல்லக் கூடுமம்மா

ஓடுகின்றாள் உருகுகின்றாள்
எதையோ தேடுகின்றாள்
எதற்கோ வாடுகின்றாள்
பித்தாய் ஆடுகின்றாள்

ஓடுகின்றாள் உருகுகின்றாள்
எதையோ தேடுகின்றாள்
எதற்கோ வாடுகின்றாள்
பித்தாய் ஆடுகின்றாள்
ஓடுகின்றாள்

தட்சணனின் மகளாக
தரணியில் பிறந்தாலும்
ரட்சகன் நினைவாக
துடித்தாய் அம்மா

தட்சணனின் மகளாக
தரணியில் பிறந்தாலும்
ரட்சகன் நினைவாக
துடித்தாய் அம்மா

தாய் வழி சேய் என்னும்
தத்துவம் மெய்யாக
நீ இவள் வாழ்விலும் நடித்தாயம்மா
பித்தாய் ஆடுகின்றாள்

ஓடுகின்றாள் உருகுகின்றாள்
எதையோ தேடுகின்றாள்

கன்னி என்றானாலும்
பிள்ளையைப் போல் அன்று
தன் நிழல்தான் கண்டு
பயந்திருந்தாள்


கன்னி என்றானாலும்
பிள்ளையைப் போல் அன்று
தன் நிழல் தான் கண்டு
பயந்திருந்தாள்

யட்சினி இனம் போலே
இன்றவள் இடுகாட்டில்
அச்சமே இல்லாமல் உலவுகின்றாள்
பித்தாய் ஆடுகின்றாள்

கட்டில் உலாவி தொட்டில் குலாவி
காதல் கொஞ்சிடும் பெண்மையே

பட்டு நூலிலும் வண்ணப்பூவிலும்
தொட்டுப் பார்க்கையில் மென்மையே

அன்பு மேடையில் இன்ப நாடகம்
ஆடி நிற்பவள் தன்மையே
பண்பு கெட்டவர் பார்வை பட்டதும்
பத்ரகாளிதான் உண்மையே

பூங்காற்றின் குணம் மாறி புயலாகுவாள்
புனலாக நின்ற மகள் அனலாகுவாள்
மோகத்தை பொய்யாக்கி யோகத்தில் நிற்பாள்
முக்கண்ணும் தீச் சொரிய திக்கெட்டும் செல்வாள்

ஓம் பத்ரகாளி ஓம் ருத்ரகாளி
காயத்ரியாய் மாரி ஓம் பத்ரகாளி
ஓம் பத்ரகாளி ஓம் பத்ரகாளி ஓம் பத்ரகாளி