Oh Krishna Duet |
---|
ஓ ஹோ ஹோஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோஓ ஹோ ஹோ
ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்
ஓ ராதா ஓ ராதா கூடவா
பூ மாலை நான் தானே சூட வா
காதல் என்னும் மந்திரம்
காதில் சொன்ன மன்னனே
ஆசை என்னும் ஊஞ்சலில்
ஆட வைத்த பொன்மணி
தனியாக நான் வாழ முடியாது
நீ இன்றி என் வானம் விடியாது
வாராமல் போவதோஓஹோ
ஓ ராதா ஓ ராதா கூடவா
பூ மாலை நான் தானே சூட வா
ஓர் நாளிலே
விழி நாலும் சேர்ந்ததேஏ
என் தோளிலே இளமானும் சாய்ந்ததே
உன் வாசல்தான் என் கோயில் சந்நிதிஈ
நீ இல்லையேல் இங்கு ஏது நிம்மாதி
நீ தந்த மோகங்கள்
யாரோடு நான் சொல்ல
நான் பாடும் ராகங்கள்
நீயன்றி வேறல்ல
ஆனந்தம் அலைபாயும்
நீயும் நானும் சேரும் பொழுது
ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்
பொன் ஓவியம்
கடல் தாண்டி வந்தது
தன் ஜீவனை உன் கையில் தந்தது
நம் நேசமே
வெறும் கானல் ஆவதாஆ
நான் இன்றியே உன் கால்கள் போவதா
என் பாதி நீயாக
உன் பாதி நானாக
ஏன் இன்று சென்றாயோ
நீ மட்டும் வேறாக
வானம் நீ தழுவாது
வாழ்வதேது காதல் நிலவு
ஓ ராதா ஓ ராதா கூடவா
பூ மாலை நான் தானே சூட வா
ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்
காதல் என்னும் மந்திரம்
காதில் சொன்ன கண்மணி
ஆசை என்னும் ஊஞ்சலில்
ஆட வைத்த கண்ணனே
தனியாக நான் வாழ முடியாது
நீ இன்றி என் வானம் விடியாது
வாராமல் போவதோஓஹோ
ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான்
ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்