Oli Pirantha Pothu |
---|
ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா
தெய்வம் நேரில் வந்ததம்மா
ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா
தெய்வம் நேரில் வந்ததம்மா
பூமகள் பொறுமையும்
நாமகள் இனிமையும்
பூமியில் வந்தது பெண்ணாக
நாணமும் பெண்மையும்
நாயகி வடிவினில்
காவியம் ஆனது உன்னாலே
இருவர் : ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா
அடுத்த வருஷம் இந்த நாளில்
தாலி உண்டாகும்
இந்த அன்னம் பெற்ற குழந்தை வந்து
தோளில் நின்றாடும்
கொடுத்து கொடுத்து வைத்ததெல்லாம்
கூட்டல் என்றாகும்
கொடுத்து கொடுத்து வைத்ததெல்லாம்
கூட்டல் என்றாகும்
இந்த குடும்பம் நல்ல கோயில் என்று
ஊரும் கொண்டாடும்
இந்த குடும்பம் நல்ல கோயில் என்று
ஊரும் கொண்டாடும்
இருவர் : ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா
தருமம் எல்லாம் உருவமாகத்
தரையில் வந்தாளோ
வாழ்வில் தன்னைத் தந்து என்னைக் காத்துப்
பெருமைக் கொண்டாளோ
பாவை உள்ளம் கோவிலென்று
எண்ண செய்தாளோ
பாவை உள்ளம் கோவிலென்று
எண்ண செய்தாளோ
அன்பு பாசம் தியாகம் யாவும் ஒன்றாய்க்
கண்ணில் நின்றாளோ
அன்பு பாசம் தியாகம் யாவும் ஒன்றாய்க்
கண்ணில் நின்றாளோ
இருவர் : ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா
தெய்வம் நேரில் வந்ததம்மா