Oorellaam Unnai Kandu

Oorellaam Unnai Kandu Song Lyrics In English


கண்களோடு இரு
கண்களோடு ஒரு காதல்
பூத்ததடி பெண்ணே
காற்றிலாடி சிறு காற்றிலாடி
ஒரு காடு பூத்ததடி கண்ணே
நெஞ்சு கூடி இரு நெஞ்சு கூடி
ஒரு நேசம் வந்ததடி பெண்ணே
ஒன்று கூடி மனம் ஒன்று கூடி
உயிர் ஒன்றி விட்டதடி கண்ணே

ஊரெல்லாம்
உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி
நயன்தாரா அன்பே உன் பின்னால்
யாரும் அலைந்தாரா கண்ணே நம்
காதல் கண்டு கலைந்தாரா

ஊரெல்லாம்
என்னை கண்டு வியந்தாரா
என்னோடு காதல் சொல்லி
நயன்தாரா

ஒருமுறை
உன்னைக் காணும்
பொழுது இரு விழிகளில்
ரோஜாக் கனவு வானத்தை
கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க
வழிகள் இல்லை

தங்கம் வெட்கப்பட்டால்
மஞ்சள் வண்ணம் மாறும் நாணம்
கொண்டதாலே உன் வண்ணம்
பொன் வண்ணம் செவ்வண்ணம்
ஆச்சு வா

கண்ணா நாம்
கண்ணும் கண்ணும்
கலப்போமா காற்றோடு
மேகத் துண்டாய் மிதப்போமா
அப்பப்பா ரெக்கை கட்டி பறப்போமா
ஆகாயம் தாண்டி சென்று வசிப்போமா


துணியினை
கொண்டு மார்பை
மறைத்தாய் துணிவினை
கொண்டு மனதை மறைத்தாய்
நேற்றோடு என்னைக் கண்டு
மலர்ந்து விட்டாய் காற்றோடு
மொட்டை போல உடைந்து விட்டாய்

சிங்கம் கொண்ட
பாலை வாங்கி வைப்பதென்றால்
தங்க கிண்ணம் வேண்டும்
கண்ணாளா நான் தானே உன்
தங்கக் கிண்ணம் வா

ஊரெல்லாம்
உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி
நயன்தாரா அன்பே உன் பின்னால்
யாரும் அலைந்தாரா கண்ணே நம்
காதல் கண்டு கலைந்தாரா

ஊரெல்லாம்
என்னை கண்டு வியந்தாரா
என்னோடு காதல் சொல்லி
நயன்தாரா அன்பே என் பின்னால்
யாரும் அலைந்தாரா கண்ணா நம்
காதல் கண்டு ம்ம்