Oru Jeevanthan Sad

Oru Jeevanthan Sad Song Lyrics In English


ஒரு ஜீவன்தான்
உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

ஸ்டுபிட் எவன் சொன்னான்
ஹூ செட் இட் ஐ சே
பாசமாவது பந்தமாவது
ஆல் நான்சென்ஸ் ஐ சே ஹஹஹஹா

ஒரு ஜீவன்தான்
உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது

ஹாஆஅஆஅஆஅஆ
ஆஅஆஅஆஅ

கீழ்வர்க்கம் மேல்வர்க்கம்
இணையாத இருகோடுகள் ஹா ஹா ஹா ஹா
சேர்ந்தாலும் ஹாசில நாளில்
கரைகின்ற மணல் வீடுகள்

கட்டில் சொந்தம் என்னை கை விட்டது
தொட்டில் சொந்தம் என்னை தொடர்கின்றது
உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான்
யாருமில்லை எனக்காகத்தான்
மலரே மலரே மடியில் தவழும் நிலவே

ஹாஉங்கம்மா
என்ன விலை கொடுத்து வாங்க நினைச்சா
நான் யாருக்கும் அடிமை இல்லை
இட்ஸ் இம்பாஸிபிள் ஐ சேஹாஹாஹா


ஒரு ஜீவன்தான்
உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது

தெய்வங்கள் சில நேரம்
தவறாக நினைக்கின்றது ஹா ஹஹஹா
பொருந்தாத இரு நெஞ்சை
மணவாழ்வில் இணைக்கின்றது

கல்யாணமே அன்பின் ஆதாரம்தான்
உன் வாழ்விலே அது வியாபாரம்தான்
மணிமாளிகை உன் வீடுதான்
மாஞ்சோலையில் என் கூடுதான்
மதுதான் மனைவி
இனி என் வாழ்க்கை துணைவி

நான் குடிப்பேன்
கேட்கறதுக்கு பொண்டாட்டியா இருக்கா
ஹஹஹஹா
குடிச்சிட்டே இருப்பேன்
என்ன கேட்கறதுக்கு யார் இருக்கா ஹா
ஹஹஹஹா

ஒரு ஜீவன்தான்
உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது ஹா ஹாஆ
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாததுஹ ஹஹஹஹா