Oru Kadhal Oru Vazhkai |
---|
இசை அமைப்பாளர் : வருண் கிருஷ்ணா
பூவிது தீ என்றால்
பூ என்ன செய்யும்
வலி தானே என்றும்
உன் மீது என் தூக்கம்
விழி என்ன செய்யும்
கண்ணீரை தான் மிஞ்சும்
நான் இங்கு கண்டேன் பொய் தூக்கமாய்
நாள் தோறும் கண்டேன் நானும் மாற்றம்
நீதானே வேண்டும்
நீ என்னை நீங்காதே
காதலை காற்றோடு தொலைத்தேனே நான்
ஆசைகளை நேற்றோடு புதைத்தேனே நான்
காலமெல்லாம் காயங்கள் ஆராதோ
வானவில்லை என் வாழ்க்கை மாறாதோ
போதும் ம்ம்
ஏன் இந்த சோகம்
எப்போது தீரும்
உன் மீது என் தூக்கம்
விழி என்ன செய்யும்
கண்ணீரை தான் மிஞ்சும்
நான் இங்கு கண்டேன் பொய் தூக்கமாய்
நாள் தோறும் கண்டேன் நானும் மாற்றம்
நீதானே வேண்டும்
நீ என்னை நீங்காதே
கைகளிலே வரமாக கிடைத்தாயே நீ
கனவுகளை என்னுடன் கலந்தாயே நீ
காலமெல்லாம் வலியோடு வாழ்ந்தேனே
நூறு ஜென்மம் என்னோடு வாராயோ
வாழ்வில் நீ வந்தால் போதும்
வேறு என்ன வேண்டும்
பூங்காற்றே என் வாழ்வில்
நீ தானே வந்தாய் ஆனந்தம் தந்தாய்
நான் இங்கு ஆனேன் பூந்தோட்டமாய்
உன்னாலே கண்டேன் நானும் காதல்
எந்நாளும் அன்பே நான்தானே உன் மீது