Oru Poonjolai

Oru Poonjolai Song Lyrics In English


ஹேஒரு பூஞ்சோலை
ஆளானதே
ஹேஒரு பொன்மாலை
தோள் சேருதே

மலர்களின் முன்னும் பின்னும்
பனித் துளி மின்னும் மின்னும்

பருவங்கள் துள்ளும் துள்ளும்
பழகிட சொல்லும் சொல்லும்
முத்தம்
தரும் சத்தம் அதில்
நித்தம் நித்தம்
நெஞ்சம் மயங்குதே

ஹேஒரு பூஞ்சோலை
ஆளானதே
ஹேஒரு பொன்மாலை
தோள் சேருதே

ஹாஆஅஆஅஆ
ஹாஆஅஆஅஆ
ஹாஆஅஆஅஆ

சிங்கார வெண்ணிலா
மண் மீதிலே
சங்கீதம் பாடுதே
உன் கண்ணிலே

செந்தாடும் பொன் மயில்
உன் தோளிலே
நின்றாட ஏங்குதே
இந்நாளிலே

காதல் தேனாறு
பாய்ந்தோடும் நேரம்
ஆசைத் தேரேறி
ஊர்கோலம் போகும்

அழகிய சித்திரமே
மதன் கலை புத்தகமே
இளமை எழுதும் இனிய கதையை
இரு உடல் அனுதினம்
எழுதட்டுமே


ஹேஒரு பூஞ்சோலை
ஆளானதே
ஹேஒரு பொன்மாலை
தோள் சேருதே



ஆகாய மேகமாய்
நான் மாறியே
உன் மீது வெண்பனி
நான் தூவவா

விண்மீனை பூக்களாய்
நான் கிள்ளியே
உன் தோளில் மாலையாய்
நான் போடவா

கண்ணில் காணாத
இன்பங்கள் யாவும்
மண்ணில் காண்பேனே
உன்னாலே நானும்

கரும்பினில் வில்லெடுத்து
அரும்பினில் அம்பெடுத்து
உருவம் இழந்த
ஒருவன் எனது
உருகிடும் இதயத்தை
துளைப்பதும் ஏன்

ஹேஒரு பூஞ்சோலை
ஆளானதே
ஹேஒரு பொன்மாலை
தோள் சேருதே

ஹாஆஅஆஅஆ
ஹாஆஅஆஅஆ
ஹாஆஅஆஅஆ