Oru Poonjolai |
---|
ஹேஒரு பூஞ்சோலை
ஆளானதே
ஹேஒரு பொன்மாலை
தோள் சேருதே
மலர்களின் முன்னும் பின்னும்
பனித் துளி மின்னும் மின்னும்
பருவங்கள் துள்ளும் துள்ளும்
பழகிட சொல்லும் சொல்லும்
முத்தம்
தரும் சத்தம் அதில்
நித்தம் நித்தம்
நெஞ்சம் மயங்குதே
ஹேஒரு பூஞ்சோலை
ஆளானதே
ஹேஒரு பொன்மாலை
தோள் சேருதே
ஹாஆஅஆஅஆ
ஹாஆஅஆஅஆ
ஹாஆஅஆஅஆ
சிங்கார வெண்ணிலா
மண் மீதிலே
சங்கீதம் பாடுதே
உன் கண்ணிலே
செந்தாடும் பொன் மயில்
உன் தோளிலே
நின்றாட ஏங்குதே
இந்நாளிலே
காதல் தேனாறு
பாய்ந்தோடும் நேரம்
ஆசைத் தேரேறி
ஊர்கோலம் போகும்
அழகிய சித்திரமே
மதன் கலை புத்தகமே
இளமை எழுதும் இனிய கதையை
இரு உடல் அனுதினம்
எழுதட்டுமே
ஹேஒரு பூஞ்சோலை
ஆளானதே
ஹேஒரு பொன்மாலை
தோள் சேருதே
ஆகாய மேகமாய்
நான் மாறியே
உன் மீது வெண்பனி
நான் தூவவா
விண்மீனை பூக்களாய்
நான் கிள்ளியே
உன் தோளில் மாலையாய்
நான் போடவா
கண்ணில் காணாத
இன்பங்கள் யாவும்
மண்ணில் காண்பேனே
உன்னாலே நானும்
கரும்பினில் வில்லெடுத்து
அரும்பினில் அம்பெடுத்து
உருவம் இழந்த
ஒருவன் எனது
உருகிடும் இதயத்தை
துளைப்பதும் ஏன்
ஹேஒரு பூஞ்சோலை
ஆளானதே
ஹேஒரு பொன்மாலை
தோள் சேருதே
ஹாஆஅஆஅஆ
ஹாஆஅஆஅஆ
ஹாஆஅஆஅஆ