Oru Tharam Ore Tharam |
---|
ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேறென்ன லாபம்
ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேறென்ன லாபம்
இருவருக்கும் முதல் மயக்கம்
இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
பெண்மை என்றால் கண் மறைவாய்
மூடி வைத்தால் சுவை இருக்கும்
இருவருக்கும் முதல் மயக்கம்
இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
உள்ளதெல்லாம் அள்ளித் தந்தால்
காலமெல்லாம் சுவை இருக்கும்
ஒரு தரம் ஒரே தரம்
உறவு தேடும் கண்கள் பாவம்
தனிமையில் உருகிடும்
பார்வையில் என்னென்ன பாவம்
வண்ணச்சிலை எதிர் வந்தாளோ
கண்ணுக்கொரு பதில் தந்தாளோ
தொட்டுக்கொள்ள தடை செய்வாளோ
தத்தி தத்தி மெல்ல செல்வாளோ
தங்கவளை தளிர்க்கையோடு
வெள்ளித் திங்கள் இரு கண்ணோடு
முத்துப்பந்தல் நகை தன்னோடு
மன்னன் மட்டும் இவள் நெஞ்சோடு
ஒரு தரம் ஒரே தரம்
உறவு தேடும் கண்கள் பாவம்
தனிமையில் உருகிடும்
பார்வையில் என்னென்ன பாவம்
சித்திரத்தின் முகம் கண்டேனே
செம்பவழ நிறம் என்றேனே
உண்ண உண்ண இதழ் செந்தேனே
உன்னிடத்தில் என்னை தந்தேனே
இல்லை என்னும் இடை தள்ளாட
மெல்ல மெல்ல உன்னை மன்றாட
சொல்ல சொல்ல தொட வந்தாயோ
என்ன என்ன சுகம் கண்டாயோ
ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேறென்ன லாபம்
ஒரு தரம்
ஒரே தரம்