Ozhakku Nelave |
---|
ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ
ஒழுக்கு நிலவே ஆராரோ
உனக்கு நானே தாயாரோ
அழுக்கு தங்கமே ஆராரோ
எனக்கு நீதான் தாயாரோ
ஆராரிராரோ ராரோ
எட்டு வச்ச நிலவே கண்ணுறங்கு
கொட்டி வச்ச நட்சத்திரம் கண்ணுறங்கு
எல்லாமே தொலைஞ்சாலும்
என் சொத்து நீதானே
சாமிக்கு பிறகு நீதானே உறவு
நான் சாகும் போது கூட இரு ஆத்தா ஆத்தா
ஒழுக்கு நிலவே ஆராரோ
ஒழுக்கு நிலவே ஆராரோ
உனக்கு நானே தாயாரோ
அடி ஏழை வீட்டு வாழப்பூவே
இன்னும் என்ன அச்சம்
உன் புன்னகை மட்டும்
போகும் பத்து லட்சம்
உன் கண்ணாடி கண்ணு மேலே
காணும் சின்ன மச்சம்
அது கடவுள் வச்ச
திருஷ்டி பொட்டின் உச்சம்
நீ மச்சக்காரி
புகழ் உச்சக்காரி
நான் பிச்சைக்காரன் ஓ ஓ
ஏ தர்மத் தாயே
நீ தங்கக்கட்டி
நான் தகரப்பெட்டி ஓ ஓஓ ஓ
உள்ளங்கை மலையே உசுருள்ள சிலையே
உன் தந்தை தாயாக வந்தேன்
நானாக வா
ஒழுக்கு நிலவே ஆராரோ
ஆராரோ
உனக்கு நானே தாயாரோ
தாயாரோ
நான் பொத்தி பொத்தி வச்ச
பூவாழக்கன்னு
முதல் மொட்டு விட்டு
பூத்துப்போச்சு நின்னு
அட உத்து உத்து பாக்குதய்யா
ஊரு சனம் நின்னு
ஒரு அம்மன் கோயில்
சிற்பம் காணோமின்னு
ஏ கன்னித்தேனே
உனை காக்கத்தானே
அட நான் வந்தேனேஏ
என் அன்பும் நீயே
என் ஆயுள் நீயே
என் சாவும் நீயே ஹோ
வேட்டைக்கு தப்பிச்ச
காட்டானை நான் தானே
மதயானைக்கேத்த
அங்குசம் யாரு நீதானே
ஒழுக்கு நிலவே ஆராரோ
ஆராரோ
உனக்கு நானே தாயாரோ
தாயாரோ
ஆராரிராரோ ராரோ