Paadinal Oru Paattu |
---|
பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு
தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு
தேடினேன் வலை போட்டு
இருவர் : பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
நல்ல தமிழ் இசை அமுதென வருகையில்
நெஞ்சம் அங்கே சென்றது
மெல்ல மயங்கிய இரு விழி மலர்களை
தென்றல் சொந்தம் கொண்டது
வெள்ளி ரதமென உருகிய பனியினில்
பெண்மை தெய்வம் நின்றது
உள்ளம் முழுவதும்
புதுவித கவிதைகள் அள்ளி அள்ளி தந்தது
இருவர் : பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
ஆளில்லாத நீரோ
நீரில்லாத ஆறோ
ஆறில்லாத ஊரோ
அவளில்லாத நானோ
மனக்கோயில் வாழ வந்த
தெய்வீக பெண் என்பதோ
எனக்காக ஏங்குகின்ற
செவ்வல்லி கண் என்பதோ
பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு
தேடினேன் வலை போட்டு
இருவர் : பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
பருவம் கொண்ட பாவை
பனி படர்ந்த பார்வை
வரவு சொல்ல தோன்றும்
உறவு கொள்ள வேண்டும்
மலர் மாலை யாருக்கென்று
பெண் பாவை கண் தேடுமோ
எதிர் பார்க்கும் ஏழை நெஞ்சம்
என்னோடு ஒன்றாகுமோ
பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு
தேடினேன் வலை போட்டு
இருவர் : பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ