Paarvai Yuvarani Kannoviyam |
---|
பார்வை யுவராணி
கண்ணோவியம் நாணம்
தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும்
சொல்லோவியம் இதுதான்
நான் கேட்ட பொன்னோவியம்
பார்வை யுவராணி
கண்ணோவியம் நாணம்
தவறாத பெண்ணோவியம்
பாலென்று
சொன்னாலும் பழமென்று
சொன்னாலும் ஏனென்று
தேன் வாடுமே
நூலென்ற இடையின்னும்
நூறாண்டு சென்றாலும்
தேர்கொண்ட ஊர்கோலமே
இன்று நானும்
கவியாக யார் காரணம்
அந்த நாளும் விளையாடும்
விழி காரணம்
பார்வை யுவராணி
கண்ணோவியம் நாணம்
தவறாத பெண்ணோவியம்
கால்வண்ணம்
சதிராட கைவண்ணம்
விளையாடும் தென்னாட்டு
பொன்வண்ணமே
மான்வண்ணம்
என்றாலும் மலர்வண்ணம்
என்றாலும் குறைவென்று
தமிழ் சொல்லுமே
வண்ணம் பாட
புது வார்த்தை நான்
தேடினேன் எங்கும்
தேடி முகம் பார்த்து
பதம் பாடினேன்
பார்வை யுவராணி
கண்ணோவியம் நாணம்
தவறாத பெண்ணோவியம்
ஒரு பக்கம் நான்
பார்த்து மறு பக்கம் நான்
பார்க்க ஒரு நாளும்
போதாதம்மா
மணி முத்து வாய்
சிந்த சிறு வெக்கம் முகம்
சொல்லும் அது மட்டும்
போதாதம்மா
என் கேள்வி சுகம்
என்று உன்னை கேட்பது
நான் சொல்வேன்
சொன்னாலும் புரியாதது
பார்வை யுவராணி
கண்ணோவியம் நாணம்
தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும்
சொல்லோவியம் இதுதான்
நான் கேட்ட பொன்னோவியம்
பார்வை யுவராணி
கண்ணோவியம்