Pallaandu Pallaandu

Pallaandu Pallaandu Song Lyrics In English


பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பல் கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள்
மணிவண்ணா உன் சேவடி
செவ்வித் திருக்காப்பு

அடியோனோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வள மார்பினில்
வாழ்கின்ற மங்கையின் பல்லாண்டு

வடிவார் சோதி வலத் துறையும்
சுடர் ஆழியும் பல்லாண்டு
படைப்போர் புக்கும் முழங்கும்
ஆஅஆஅஆ
அப்பஞ்ச சன்னியமும் பல்லாண்டே
ஆஅஆஅஆ
ஆஅஆஅஆ

ஹரி ஓம் மாதவன்
பாதம் என்றும் சரணம்
அவன்தான் நல்லருள்
இன்றும் என்றும் தரணும்

அருள் மாமழையை
வார்க்கும் நீல நயணம்
அழியா மேன்மை
வாழ்வு வாசல் வரணும்

அவன்தான் ரங்கன் அரங்கன்
மறை நூல் ஞான சுரங்கன்
மதுசூதன் மணிவண்ணன்
திருநாமம் பாட பாட இன்பம்

ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன்
பாதம் என்றும் சரணம்
அவன்தான் நல்லருள்
இன்றும் என்றும் தரணும்ம்ம்ம்ம்ம்

கோவிலில் நாள்தோறும்
பூவாரம் சூட்டியே
பூஜைகள் செய்கின்றவன்ன்

வீட்டினில் அதுபோல
தாய் தன்னை போற்றியே
சேவைகள் செய்கின்றவன்


அவன்தான் நல்ல மனிதன்
அவன் போல் இல்லை புனிதன்
பால் போல் வெண்மை இதயம்
பரி போல் மென்மை வடிவம்
அவன் தாயாரை தாலாட்டி
தாயாகிப் போனானே

ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன்
பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள்
இன்றும் என்றும் தரணும்ம்ம்ம்

தங்கையை இன்னும்
ஓர் தாயாக போற்றியே
பாசங்கள் வார்க்கின்றவன்

தாயினும் மேலான
அன்பை தான் காட்டியே
நேசங்கள் வளர்க்கின்றவன்

இதுதான் நல்ல குடும்பம்
இதில்தான் தெய்வம் விளங்கும்
வாழும் மூவர் உறவும்
வண்ண தமிழின் வடிவம்

இது எந்நாளும் ஆனந்தம்
கொண்டாடும் வீடாகும்
ஆஅஆஅஆ
ஆஅஆஅஆ
ஆஅஆஅஆ

ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன்
பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள்
இன்றும் என்றும் தரணும்ம்ம்ம்ம்ம்ம்