Para Para Sad

Para Para Sad Song Lyrics In English


பற பற பறவை
ஒன்று கர கர கரையில்
நின்று கண்ணீரில் கடல்
அலை நனைக்குதே

கட கட கடலுக்குள்ளே
பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ
வளர்த்து துடிக்குதே

என் தேவன் போன
திசையிலே ஜீவன் சேர்த்து
அனுப்பினேன் என் ஜீவன்
வந்து சேருமா தேகம் மீண்டும்
வாழுமா இதோ எந்தன் கண்ணீர்
அந்த அலையில் சேரும் அலை
மறுபடி உன்னிடம் வருமா

பற பற பறவை
ஒன்று கர கர கரையில்
நின்று கண்ணீரில் கடல்
அலை நனைக்குதே

கட கட கடலுக்குள்ளே
பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ
வளர்த்து துடிக்குதே

தண்ணீரில் வலையும்
நிற்கும் தண்ணீரா வலையில்
நிற்கும் என் தேவன் எப்போதும்
திரிகிறான் காற்றுக்கு தமிழும்
தெரியும் கண்ணாளன் திசையும்
தெரியும் கட்டாயம் துன்பம்
சொல்லும் மறக்கிறான்

உனது வேர்வையின்
மார்புக்குள் பிசுக்கு பிசுக்கென்று
கிடக்குதே ஈர வேர்வைகள் தீரும்
முன் எனது உயிர்பசை காய்வதா
வானும் மண்ணும் கூடும் போது
நானும் நீயும் கூடாமல் வாழ்வது
கொடுமை

பற பற பறவை
ஒன்று கர கர கரையில்
நின்று கண்ணீரில் கடல்
அலை நனைக்குதே

கட கட கடலுக்குள்ளே
பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ
வளர்த்து துடிக்குதே


ஊரெங்கும் மழையும்
இல்லை வேரெங்கும் புயலும்
இல்லை என்றாலும் நெஞ்சில்
இடி இடிக்குதே கண்ணாளன்
நிலைமை என்ன கடலோடு
பார்த்து சொல்ல கொக்குக்கும்
நாரைக்கும் கண் அலையுதே

நீரின் மகன் எந்தன்
காதலன் நீரின் கருணையில்
வாழ்வான் இன்று நாளைக்குள்
மீளுவான் எனது பெண்மையை
ஆளுவான் என்னை மீண்டும்
தீண்டும் போது கடல் தேவன்
இருமுறை முதலிரவுகள்
தருவான்

பற பற பறவை
ஒன்று கர கர கரையில்
நின்று கண்ணீரில் கடல்
அலை நனைக்குதே

கட கட கடலுக்குள்ளே
பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ
வளர்த்து துடிக்குதே

என் தேவன் போன
திசையிலே ஜீவன் சேர்த்து
அனுப்பினேன் என் ஜீவன்
வந்து சேருமா தேகம் மீண்டும்
வாழுமா இதோ எந்தன் கண்ணீர்
அந்த அலையில் சேரும் அலை
மறுபடி உன்னிடம் வருமா

பற பற பறவை
ஒன்று கர கர கரையில்
நின்று கண்ணீரில் கடல்
அலை நனைக்குதே

கட கட கடலுக்குள்ளே
பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ
வளர்த்து துடிக்குதே