Parvathi Ennai Paradi

Parvathi Ennai Paradi Song Lyrics In English


பார்வதி என்னைப் பாரடி
பூங்கொடி வந்து சேரடி
சின்னப் பூங்கிளி
என்னைச் சேருமோ

சின்னப் பூங்கிளி
என்னைச் சேருமோ
மயக்கம் நெஞ்சோடுதான்
வண்ணப் பூங்கொடி
வந்து கூடுமோ
கலக்கம் கண்ணோடுதான்

சோலையோ நடுச்சாலையோ
தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ
வாடினேன்
இதயம் இனியும் சரணம்

சின்னப் பூங்கிளி
என்னைச் சேருமோ
மயக்கம் நெஞ்சோடுதான்
வண்ணப் பூங்கொடி
வந்து கூடுமோ
கலக்கம் கண்ணோடுதான்

வேடன் வந்து
சூழ்ந்த போதும்
உன் எல்லை தான்
வேடந்தாங்கல் என்று எண்ணும்
பூங்கிள்ளை நான்

முள்ளில் வேலி
போட்டால் என்ன
மாலைக் காற்று தாண்டாதா
கள்ளில் ஊறும் ஜாதிப் பூவை
கைகள் நீட்டித் தீண்டாதா

நீ அல்லால் உயிர் வேறெது
நீர் இன்றி பயிர் வாடுது
தேவியே எந்தன் ஆவியே கேளடி
இதயம் இனியும் சரணம்

சின்னப் பூங்கிளி
என்னைச் சேருமோ
மயக்கம் நெஞ்சோடுதான்
வண்ணப் பூங்கொடி
வந்து கூடுமோ
கலக்கம் கண்ணோடுதான்


உன்னைச் சேர்ந்து
வாழத்தானே நான் வாழ்வது
உன்னை நீங்கி தேகம் இங்கே
ஏன் வாழ்வது

மண்ணில் வாழும்
ஏழைக்கெல்லாம்
பெண்ணின் மோகம் ஆகாதா
மண்ணால் செய்த பாண்டம் என்றால்
பொங்கும் சோறு வேகாதா

தேவதாஸ் கதை பாரடி
ஓய்ந்ததா பதில் கூறடி
காதலி எந்தன் பார்வதி காதலன்
இதயம் இனியும் சரணம்

சின்னப் பூங்கிளி
என்னைச் சேருமோ
மயக்கம் நெஞ்சோடுதான்
வண்ணப் பூங்கொடி
வந்து கூடுமோ
கலக்கம் கண்ணோடுதான்

சோலையோ நடுச்சாலையோ
தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ
வாடினேன்
இதயம் இனியும் சரணம்

சின்னப் பூங்கிளி
என்னைச் சேருமோ
மயக்கம் நெஞ்சோடுதான்
வண்ணப் பூங்கொடி
வந்து கூடுமோ
கலக்கம் கண்ணோடுதான்