Pemmane |
---|
ஓஒஓஒஆஅஆஅ
ஹோஓஒஆஅஆஅ
ஹாஹா ஆஆஆஅஆஅ
பெம்மானே
பேருலகின் பெருமானே
ஆண்ட இனம்
மாண்டழிய அருள்வாயோ ஓஒ ஓஒ
பெய்யோனே
மெய் உருகி வீழ்கின்றோம்
வெந்தழிந்து வாழ்கின்றோம்
விதிதானோஓஒ ஓ
குலம் பெயர்ந்தோம்
பொழிவிழந்தோம்
புலன் கழிந்தோம்
அழுதழுது உயிர் கிழிந்தோம்
அருள்கோனேஏஏ
பெம்மானே
பேருலகின் பெருமானே
ஆண்ட இனம்
மாண்டழிய அருள்வாயோ ஓஒ ஓஒ
சோறி இல்லை
சொட்டு மழை நீரில்லை
தொண்டையிலும் பால் இல்லை
கொன்றையோனே
மூப்பானோம்
உருவழிந்து முடமானோம்
மூச்சு விடும் பிணம் ஆனோம்
முக்களோனே
ஊண்டெய்தோம்
ஊணுருகி உயிர் ஓய்ந்தோம்
ஓர் இழையில் வாழ்கின்றோம்
உதய்கோனே
நீராகி
ஐம்புலனும் வேராகி
பொன் உடலும் சேறாகிப்
போகமாட்டோம்
எம் தஞ்சை யாம் பிறந்த பொன் தஞ்சை
விரல் ஐந்தும் தீண்டாமல்
வேகமாட்டோம்
தாழ்ந்தாலும்
சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்
ஒஹோஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ
பொன்னார் மேனியனே
வெம் புலி தோல் உடுத்தவனே!
இன்னோர் தோல் கருதி
நீ எம் தோல் உரிப்பதுவோ
முன்னோர் பாற் கடலில்
அன்று முழு நஞ்சுண்டவனே
பின்னோர் எம்மவர்க்கும்
நஞ்சு பிரித்து வழங்குதியோ ஓஒ ஓஒ
பெம்மானே
பேருலகின் பெருமானே
ஆண்ட இனம்
மாண்டழிய அருள்வாயோ