Per Solla Vantha |
---|
ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரோ
ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரீரோ ஆராரோ
பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே
சீர் கொண்டு வந்த அன்புத் தேனே
பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே
சீர் கொண்டு வந்த அன்புத் தேனே
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
அன்பென்னும் பாலம் தந்தவனே
பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே
சீர் கொண்டு வந்த அன்புத் தேனே
மன்னாதி மன்னர்கள் போல் நீயும் வாழ
பண்ணாரி அம்மனை நான் வேண்டி வந்தேன்
கண்ணான கண்ணே என் கலி தீர்க்க வேண்டும்
கருமாரி அம்மன் நம் துணை ஆக வேண்டும்
வருகிற காலம் என்றும் வளமாக வேண்டும்
வாழ்கின்ற வாழ்வு என்றும் நலமாக வேண்டும்
பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே
சீர் கொண்டு வந்த அன்புத் தேனே
என் ஆசை என் நேசம் எல்லாமும் நீயே
எண்ணத்தில் சொர்க்கத்தை தந்தாய் என் ராஜா
தங்கத்தில் வைரத்தில் நகை ஏதும் இல்லை
தங்கம் போல் நீ சிந்தும் நகை ஒன்று போதும்
கள்வர்கள் கொள்ளை கொள்ளும்
செல்வங்கள் வேண்டாம்
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்
உன் அன்பு போதும்
பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே
சீர் கொண்டு வந்த அன்புத் தேனே
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
அன்பென்னும் பாலம் தந்தவனே
பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே
சீர் கொண்டு வந்த அன்புத் தேனே
ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரோ
ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரீரோ ஆராரோ