Petha Usuru

Petha Usuru Song Lyrics In English


பெத்த உசுரு ரத்த உசுரு போனதே
பச்சை மரம்தான் பட்டை மரமாய் ஆனதே

பெத்த உசுரு ரத்த உசுரு போனதே
பச்சை மரம்தான் பட்டை மரமாய் ஆனதே

உந்தன் நினைவு
நெஞ்சுக்குழியில் வாட்டுதே
கண்கள் அழுது உந்தன்
நினைவில் ஏங்குதே

கண்ணுக்குள்ளே உன்னை வைத்து
வாழ்ந்தவன்தான் நானம்மா
கால்களி கட்டிலிலே போவதெங்கே
சொல்லம்மா

என்ன நினைத்தாயோ
என்னை படைத்தாயோ
என்னை மறந்தாயோ
உயிர் துறந்தாயோ

பெத்த உசுரு ரத்த உசுரு போனதே
பச்சை மரம்தான் பட்டை மரமாய் ஆனதே


தாயின்றி உயிர்கள் உலகில் ஏதம்மா
நீயின்றி நானும் வாழக் கூடுமா

தொட்டிலிலே தாலாட்டிய தாயம்மா
கட்டிலிலே கண்ணுறங்குவது ஏன்னம்மா
கட்டிலிலே கண்ணுறங்கும் பூவம்மா
விட்டு விட்டு போனதுதான் நியாயம்மா

அடி தாங்கலயே
கண்ணிரெண்டும் தூங்கலயே
நெஞ்சம் அது ஆறலையே
உயிர்தான் காணலயே
என்  உயிர்தான் காணலயே

பெத்த உசுரு ரத்த உசுரு போனதே
பச்சை மரம்தான் பட்டை மரமாய் ஆனதே

உந்தன் நினைவு
நெஞ்சுக்குழியில் வாட்டுதே
கண்கள் அழுது உந்தன்
நினைவில் ஏங்குதே