Petha Usuru |
---|
பெத்த உசுரு ரத்த உசுரு போனதே
பச்சை மரம்தான் பட்டை மரமாய் ஆனதே
பெத்த உசுரு ரத்த உசுரு போனதே
பச்சை மரம்தான் பட்டை மரமாய் ஆனதே
உந்தன் நினைவு
நெஞ்சுக்குழியில் வாட்டுதே
கண்கள் அழுது உந்தன்
நினைவில் ஏங்குதே
கண்ணுக்குள்ளே உன்னை வைத்து
வாழ்ந்தவன்தான் நானம்மா
கால்களி கட்டிலிலே போவதெங்கே
சொல்லம்மா
என்ன நினைத்தாயோ
என்னை படைத்தாயோ
என்னை மறந்தாயோ
உயிர் துறந்தாயோ
பெத்த உசுரு ரத்த உசுரு போனதே
பச்சை மரம்தான் பட்டை மரமாய் ஆனதே
தாயின்றி உயிர்கள் உலகில் ஏதம்மா
நீயின்றி நானும் வாழக் கூடுமா
தொட்டிலிலே தாலாட்டிய தாயம்மா
கட்டிலிலே கண்ணுறங்குவது ஏன்னம்மா
கட்டிலிலே கண்ணுறங்கும் பூவம்மா
விட்டு விட்டு போனதுதான் நியாயம்மா
அடி தாங்கலயே
கண்ணிரெண்டும் தூங்கலயே
நெஞ்சம் அது ஆறலையே
உயிர்தான் காணலயே
என் உயிர்தான் காணலயே
பெத்த உசுரு ரத்த உசுரு போனதே
பச்சை மரம்தான் பட்டை மரமாய் ஆனதே
உந்தன் நினைவு
நெஞ்சுக்குழியில் வாட்டுதே
கண்கள் அழுது உந்தன்
நினைவில் ஏங்குதே