Pethu Pottadhaaro

Pethu Pottadhaaro Song Lyrics In English


பெத்துப் போட்டதாரோ
குத்தம் உள்ள தாயோ
ஏன் சாமி நீ சொல்லு
பேரு வெச்சதாரோ
பேரு கேட்ட தாயோ
ஏன் சாமி நீ சொல்லு

ஏதேதோ இந்த ஊரு பேசுது
என்னான்னு சொல்ல நா கூசுது
உலை வாயை மூட அறிவேனையா
ஊர் வாயை மூட ஆகாதையா

பெத்துப் போட்டதாரோ
குத்தம் உள்ள தாயோ
ஏன் சாமி நீ சொல்லு
ஏன் சாமி நீ சொல்லு

என் உசுரக் கண்ணில் வெச்சுக் காத்தது
என் பசியக் கஞ்சி ஊத்தித் தீத்தது
தாயப் போல யாரும் இல்ல
அந்தத் தாய் இல்லாட்டி நானும் இல்ல
நாள் எல்லாம் இந்தப் பிள்ளை தான்
வாழ்வது அவ பிச்சை தான்
உப்புத் தின்னப் பாசம் போய் விடுமா
தப்புச் சொல்லிப் பேச வாய் வருமா

பெத்துப் போட்டதாரோ
குத்தம் உள்ள தாயோ
ஏன் சாமி நீ சொல்லு
ஏன் சாமி நீ சொல்லு


கங்கை என்ன கூவம் போல மாறுமா
கோபுரம் தான் குப்பை மேடா ஆகுமா
வானம் மண்ணில் வீழ்ந்திடுமா
சுத்தத் தங்கம் தரம் தாழ்ந்திடுமா
தாயைப் பார் அன்பு தெய்வமா
தெய்வம் தான் குத்தம் செய்யுமா
நெஞ்சம் இந்தக் கேள்வி கேட்கிறது
என்ன பதில் நானும் கூறுவது

பெத்துப் போட்டதாரோ
குத்தம் உள்ள தாயோ
ஏன் சாமி நீ சொல்லு
ஏன் சாமி நீ சொல்லு

ஏதேதோ இந்த ஊரு பேசுது
என்னான்னு சொல்ல நா கூசுது
உலை வாயை மூட அறிவேனையா
ஊர் வாயை மூட ஆகாதையா

பெத்துப் போட்டதாரோ
குத்தம் உள்ள தாயோ
ஏன் சாமி நீ சொல்லு
ஏன் சாமி நீ சொல்லு