Ponneduthu Varen |
---|
பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப் போறேன்
என்னை அள்ளித் தாரேன் தாரேன்
உன்னத் தொட்டு நானும் வாரேன்
சொந்தம் இருக்கு
ஆ
சொர்க்கம் இருக்கு
ஆ
இன்பம் நமக்கு
இருவர் : ஆ ஆஆஅஆ
பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப் போறேன்
என்னை அள்ளித் தாரேன் தாரேன்
உன்னத் தொட்டு நானும் வாரேன்
சொன்னால் ஒரு ஆனந்தம்
உன்னால் வரும் பேரின்பம்
சொல்லிச் சொல்லி தீராது
சொக்க வெச்ச மாமன் சொந்தம்
தொட்டு வரும் பூங்காற்று
சொல்லித் தரும் தேன் பாட்டு
நித்தம் நித்தம் நான் கேட்டு
கிட்ட வந்தேன் ஆசப் பட்டு
சிந்தாமணி சேல மூடி
சிந்தும் புதுப் பாட்டு தான்
செந்தாமரப் பூவப் போல
சின்னப் பொண்ணுதான்
கண்ணாடி போல் மேனி மீது
என்னை தினம் பார்க்கவா
உன்னால் சுகம் கூடும் போது
சொர்க்கம் அல்லவா
போதும் பெண் மேனி புண்ணாகிப் போகும்
ம்ஹும் ம்ஹும்
பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப் போறேன்
என்னை அள்ளித் தாரேன் தாரேன்
உன்னத் தொட்டு நானும் வாரேன்
எத்தனையோ நாளாக
என் உடம்பு நூலாக
மெத்தையிலே மேலாக
தத்தளிச்சேன் மேனி நோக
கொட்டும் மழை ஊற்றாக
கோடை குளிர் காற்றாக
புத்தம் புது பாட்டாக
பொங்குதடி போகப் போக
உச்சி முதல் பாதம் தோறும்
உஷ்ணம் வந்து ஏறுது
உங்க முகம் பாத்த போது வெக்கம் வருது
செங்கரும்பு சாறு போல
உள்ளுக்குள்ள ஊறுது
கங்கை நதி வைகையோடு கட்டிக் கொள்ளுது
போதும் பெண் மேனி புண்ணாகிப் போகும்
ம்ஹும் ம்ஹும்
பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப் போறேன்
என்னை அள்ளித் தாரேன் தாரேன்
உன்னத் தொட்டு நானும் வாரேன்
சொந்தம் இருக்கு
ஆசொர்க்கம் இருக்கு
ஓஇன்பம் நமக்கு
இருவர் : ஆ ஆ
பொன்னெடுத்து வாரேன் வாரேன்
உன் கழுத்தில் பூட்டப் போறேன்
இருவர் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்
உன்னத் தொட்டு நானும் வாரேன்