Pottirunthum |
---|
இசை அமைப்பாளர் : ஆர் சுதர்சனம்
பொட்டிருந்தும் பூ இருந்தும்
புன்னகை இல்லை
இந்த பூட்டி வைத்த கோட்டையிலே
மன்னவன் இல்லை மன்னவன் இல்லை
கண் இருந்தும் பார்ப்பதற்கு
காட்சி இல்லை
கண் இருந்தும் பார்ப்பதற்கு காட்சி இல்லை
கை இருந்தும் சேவை செய்ய கடவுள் இல்லை
என் கடவுள் இல்லை
பொட்டிருந்தும் பூ இருந்தும்
புன்னகை இல்லை
இந்த பூட்டி வைத்த கோட்டையிலே
மன்னவன் இல்லை மன்னவன் இல்லை
கோலம் இட்டேன் வாசலிலே
அழியவில்லை
அதில் கொண்டவரின் திருவடிகள்
பதியவில்லை பதியவில்லை
கோலம் இட்டேன் வாசலிலே
அழியவில்லை
அதில் கொண்டவரின் திருவடிகள்
பதியவில்லை பதியவில்லை
தென்றலினை தூது விட்டேன்
திரும்பவில்லை
தென்றலினை தூது விட்டேன்
திரும்பவில்லை
நெஞ்சில் தீ மூட்டும் தனிமைக்கென் மேல்
இரக்கம் இல்லை இரக்கம் இல்லை
பொட்டிருந்தும் பூ இருந்தும்
புன்னகை இல்லை
இந்த பூட்டி வைத்த கோட்டையிலே
மன்னவன் இல்லை மன்னவன் இல்லை
பொட்டிருந்தும் பூ இருந்தும்
புன்னகை இல்லை
இந்த பூட்டி வைத்த கோட்டையிலே
மன்னவன் இல்லை மன்னவன் இல்லை