Saetril Oru Sengazhani

Saetril Oru Sengazhani Song Lyrics In English


சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
நூற்றில் ஒரு பூ பறித்து
போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா
நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா

சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
நூற்றில் ஒரு பூ பறித்து
போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா
நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா

பாளை விரித்தார் போல்
கள்ளம் இல்லா சிரிப்பில்
ஆளை வளைக்கின்ற சுகம் என்னவோ
மாலை தொடுத்தார் போல்
கைகள் தரும் அணைப்பில்
நாலும் புரிகின்ற நயம் என்னவோ

வாழைக் குருத்தாட்டம்
வஞ்சம் இன்றி வளர்ந்த பெண்ணை
வாழ்வில் துணையாக
சொந்தம் கொண்டு நன்மை செய்வாய்
அன்பே என்றும் அய்யா என்றும்
சொல்ல சொல்ல கொள்ளை இன்பம் ஏனோ
அதில் சுவைப்பது தான் ஊறி வரும் தேனோ

சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
நூற்றில் ஒரு பூ பறித்து
போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணே
நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணே

நாதம் பிறக்காத
வீணை என்ன வீணை
நேசம் பிறக்காமல் உறவில்லையே
பாசக் கொடி போல ஒன்றை ஒன்று பின்னும்
மோகம் வளராமல் சுகம் இல்லையே


நேத்து அறியாத இன்பம் எல்லாம்
கண்டேன் இன்று
நாளை மணம் கொள்வேன் இன்னும் இன்னும்
கலைகள் சொல்வாய்
கட்டில் தந்து தொட்டில் கண்டு
மங்கை உந்தன் நிழலில் நின்று வாழ்வேன்
என்றும் மன்னன் உந்தன் மடியில் இன்று வாழ்வேன்

சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்

நூற்றில் ஒரு பூ பறித்து
போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா
நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணே

நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா