Sangeethame En Dheivame

Sangeethame En Dheivame Song Lyrics In English


தானனாதானனனா
தனனனதானானா
தனனனா தனனனா
தானனனானனனாஆஆஆ

சங்கீதமே
சங்கீதமேஏஏஎன் தெய்வமே
நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்
நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்
ஓடி வந்தேன் உன்னை நான் பாட

சங்கீதமேஏஏஎன் தெய்வமே

மாலையில் தீபங்கள் மணி தரும் நாதங்கள்
மனதினில் ஆயிரம் இன்பம்
மாலையில் தீபங்கள் மணி தரும் நாதங்கள்
மனதினில் ஆயிரம் இன்பம்

பார்த்தது பொய்யாக பழங்கதை என்றாக
எனக்கின்று ஏனிந்த துன்பம்
எனக்கின்று ஏனிந்த துன்பம்

அந்த தமிழிசை கேட்டு
இள நெஞ்சில் எழுந்தது பாட்டு
அந்த கவிதைகள் எங்கே
என் ஆசை கனவுகள் எங்கே
அது வருமோ சுகம் தருமோ
இனி ஒரு முறை உயிரும் துணை வருமோ
இனி அதுவரை ஆதாரமென நான் தேடியது
ஆகாததென ஏன் ஆகியது

நிலவிலும் எனதுடல்
அனுதினம் முழுவதும்
தண்ணீரில் ஆறாது கண்ணீரும் மாறாது

இனிய சங்கீதமேஏஏ
என் தெய்வமே

ஏழிசை கேட்காமல் எழில் முகம் பார்க்காமல்
தவித்தது பெண் மனம் ஒன்று


ஏழிசை கேட்காமல் எழில் முகம் பார்க்காமல்
தவித்தது பெண் மனம் ஒன்று

நாயனம் காதோடு தரிசனம் கண்ணோடு
கிடைத்தது நிம்மதி இன்று
கிடைத்தது நிம்மதி இன்று

வெள்ளம் தமிழிசை வெள்ளம்
அதில் துள்ளும் உருகிய உள்ளம்

கல்லும் கனியென ஆகும்
ஒரு முள்ளும் மலரென மாறும்
உனை மறவேன் தினம் வருவேன்
இசை மழையில் நனைவேன்
கவி புனைவேன் இனி உலகினில்

ஆனந்தலய நாதங்களுடன்
நீ தந்த இசை பேரின்ப சுகம்

ஒரு முறை மறுமுறை பெறுவதில் தவறேது
ஒன்றான உள்ளங்கள்
என்றென்றும் சந்திக்க
அழைக்கும்சங்கீதமேஎன் தெய்வமே
நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்
ஓடி வந்தேன் உன்னை நான் பாட

சங்கீதமே சங்கீதமே சங்கீதமே