Sendhamizh Thenmozhiyaal Sad |
---|
சில்லென்று பூத்த
சிறு நெருஞ்சி காட்டினிலேஏ
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனதேன்
நின்றது போல் நின்றேன்
நெடுந்தூரம் பறந்ததேன்
நிற்குமோ ஓஒ ஆவி
நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
காற்றினில் பிறந்தவளோ
புதிதாய் கற்பனை வடித்தவளோ
காற்றினில் பிறந்தவளோ
புதிதாய் கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
காட்டினில் எரிக்கும் நிலவானாள்
பெரும் கடலினில் பெய்த மழையானாள்
காட்டினில் எரிக்கும் நிலவானாள்
பெரும் கடலினில் பெய்த மழையானாள்
ஏட்டினில் எழுதா கவிதையைப் போலே
இல்லாத பொருள் போல் தனியானாள்
ஏட்டினில் எழுதா கவிதையைப் போலே
இல்லாத பொருள் போல் தனியானாள்
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்