Sillendra Malare |
---|
மற்றும் எம் எஸ் விஸ்வநாதன்
சில்லென்ற மலரே செவ்வாழை மடலே
யாரோடு என் சோகம் சொல்ல ஓ
நீ ஒன்றும் என் அன்னை அல்ல
சில்லென்ற மலரே செவ்வாழை மடலே
யாரோடு என் சோகம் சொல்ல ஓ
நீ ஒன்றும் என் அன்னை அல்ல
கொடிப் போன்ற பெண்கள்
படித்தாண்டி வந்தால்
கண்ணீரில் உலை வைப்பதோ
சில்லென்ற மலரே செவ்வாழை மடலே
யாரோடு என் சோகம் சொல்ல ஓ
நீ ஒன்றும் என் அன்னை அல்ல
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரரோ
சிறகுள்ள அந்நாளில் திசை காணவில்லை
கால் போன வழியோடு போனேன்
திசையுள்ள இந்நாளில் சிறகொன்றும் இல்லை
சிறைக் கொண்ட கிளியாக ஆனேன்
என் பூந்தோட்டம் தாண்டி பூஜைக்கு வந்தேன்
நடைபாதை பூவாக நான் வாடவோ
என் பூந்தோட்டம் தாண்டி பூஜைக்கு வந்தேன்
நடைபாதை பூவாக நான் வாடவோ
தளிர்க் கொண்ட கண்ணே
தமிழ் கொண்டு வந்து
தாயே தாலாட்டு நான் தூங்கி நாளானது
கொடிப் போன்ற பெண்கள்
படித்தாண்டி வந்தால்
கண்ணீரில் உலை வைப்பதோ
சில்லென்ற மலரே செவ்வாழை மடலே
யாரோடு என் சோகம் சொல்ல ஓ
நீ ஒன்றும் என் அன்னை அல்ல
தாய் தந்தை உறவொன்றும்
விளையாட்டு இல்லை
இப்போது நான் கண்டு கொண்டேன்
சீரான இல்வாழ்க்கை சிறு கீரை இல்லை
சிரமங்கள் உண்டென்று கண்டேன்
என் ஒரு சேலை தானே
நான் கொண்டு வந்தேன்
அது கூட கண்ணீரில் நிறம் போவதா
என் ஒரு சேலை தானே
நான் கொண்டு வந்தேன்
அது கூட கண்ணீரில் நிறம் போவதா
பூந்தோட்டம் வேண்டாம்
சோகங்கள் வேண்டாம்
அன்பை நான் கேட்டேன்
நீ வாழ நான் வாழ்கிறேன்
கொடிப் போன்ற பெண்கள்
படித்தாண்டி வந்தால்
கண்ணீரில் உலை வைப்பதோ
சில்லென்ற மலரே செவ்வாழை மடலே
யாரோடு என் சோகம் சொல்ல ஓ
நீ ஒன்றும் என் அன்னை அல்ல