Siru Thoduthalile

Siru Thoduthalile Song Lyrics In English


சிறு தொடுதலிலே
சின்ன சின்னதாய் சிறகுகள்
பூக்க வரும் இரவுகளில்
இன்னும் இன்னும் நான்
கேட்க

இது வரையிலும்
நான் எண்ணவில்லையே
இனிமையை வாங்க சில
நொடிகளிலே உந்தன்
அன்பிலே நான்

எனக்கே என்னை
தெரியாமல் இருந்தேன்
அன்பே எதற்காக சிரிப்பால்
உலகை கொடுத்தாயே
இரண்டாம் தாய் போல்
கிடைத்தாயே

நான் உனக்கென
இருப்பது தெரியாதா எதை
நான் சொல்வேன் பதிலாக
இனிப்பாய் என்னை நீ கவர்ந்தாயே
இயல்பாய் மனதை திறந்தாயே

ஒரு முறை காதல்
இரு முறை மோதல் பல
முறை சாதல் வாழ்க்கையிலே

ஒரு முறை கூடல்
பல முறை தேடல்
நெருக்கத்திலே

ஒரு முறை காதல்
இரு முறை மோதல் பல
முறை சாதல் வாழ்க்கையிலே



அலையே இல்லா
கடல் போல இருந்தேன்
அன்பே எதற்காக கிடைத்தாய்
கரையாய் நடந்தேனே கிழக்காய்
உதித்தாய் உடைந்தேனே


மழையே இல்லா
நிலம் போல பொறுத்தேன்
அன்பே உனக்காக கொடுத்தாய்
உன்னை நீ முழுதாக எடுத்தாய்
எனையும் அழகாக

எது வரை நீயோ
அது வரை நானோ இது
வரை ஆசை காதலிலே

எது வரை காதல்
அது வரை காமம் பூமியிலே

எது வரை நீயோ
அது வரை நானோ இது
வரை ஆசை காதலிலே



சிறு தொடுதலிலே
சின்ன சின்னதாய் சிறகுகள்
பூக்க வரும் இரவுகளில் இன்னும்
இன்னும் நான் கேட்க

இது வரையிலும் நான்
எண்ணவில்லையே இனிமையை
வாங்க சில நொடிகளிலே உந்தன்
அன்பிலே நான்