Sivakami Ninaipinilae |
---|
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல
மறந்ததென்ன
முக்கனியே சர்க்கரையே
ஒத்தையிலே நிக்குறியே
வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல
மறந்ததென்ன
ஆலமரக்கிளி அன்னாடம் என்னோடு
பேசுமா இல்லை ஏசுமா
ஆத்தங்கரையினில் அத்தானும் முத்தாடக்
கூடுமா விட்டு ஓடுமா
கோலக்கிளிப் பேச்ச கட்டாயம் தட்டாம
கேட்கவா என்னைப் பார்க்கவா
காலம் கடத்தாமல் கையோடு கையாக
சேர்க்கவா மையல் தீர்க்கவா
போதும் இது போதும்
இந்த பிறவியில்
வேறொன்றும் வேண்டாமே
மோதும் அலை மோதும்
நெஞ்சக் கடலில்
ஆசைகள் ஓயாம
வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ
அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல
மறந்ததென்ன
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே
வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ
காதல் கடுதாசி கண்ணால இந்நேரம்
போட்டது வந்து சேர்ந்தது
கூடிக் கலந்திட கும்மாளம் இப்போது
தோணுது பொண்ணு நாணுது
தேனும் திணை மாவும் தின்னாம நின்னாலே
தாங்குமா பசி நீங்குமா
தேடக் கிடைக்காத பொன்னாரம் என் கையில்
சேருமா சுகம் மீறுமா
பேசி வலை வீசி
இந்த மனசுல
போதைய ஏத்தாதே
ராசி நல்ல ராசி
நம்ம பொருத்தத்தை
நீ என்றும் மாத்தாதே
இப்ப என்னவோ என்னவோ என்னவோ
என்னைப் பண்ணுதே பண்ணுதே பண்ணுதே
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல
மறந்ததென்ன
எம்மனச ஒட்டுறியே மம்முட்டிப் போல் வெட்டுறியே
வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல
மறந்ததென்ன