Thamaraiyai Vaazhthi Paada |
---|
தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு
கங்கை நதி தீரத்திலே காலமெல்லாம் மீன்கள் உண்டு தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு
தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு
அன்புக்கொரு தாள் போட்டு அடைத்து வைக்க ஆளுமில்லை ஆகாயம் மழை பொழிந்தால் அதை தடுக்க யாருமில்லை முல்லைச் சாரமோ இவள் முத்து ரதமோ முல்லைச் சாரமோ இவள் முத்து ரதமோ
இசையின் ஒலி போல் என்னோடு கலந்தாள் ஆஆஆஆஆ இசையின் ஒலி போல் என்னோடு கலந்தாள் இமையாய் நான் காக்க கண்ணாக மலர்ந்தாள்
தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு
தங்க மகள் இவள் அருகில் தொண்டனை போல் துணை இருப்பேன் தாய் கொடுத்த என் உயிரை இவளுக்கென்று நான் கொடுப்பேன் பாசமென்பது வெறும் வேஷமில்லையே பாசமென்பது வெறும் வேஷமில்லையே
உறவின் உதிரம் ஒன்றாகி தொடரும் உயிரின் ஒளிப் போல் கொண்டாடி வளரும்
தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு
திரௌபதிக்கு கண்ணனை போல் இங்கு வந்த அண்ணன் அன்றோ தூய ஒரு அன்பு கொண்டு துணை இருக்கும் மன்னன் அன்றோ
திரௌபதிக்கு கண்ணனை போல் இங்கு வந்த அண்ணன் அன்றோ தூய ஒரு அன்பு கொண்டு துணை இருக்கும் மன்னன் அன்றோ
வாழ்த்திட வந்தான் என்னை காத்திட நின்றான் வாழ்த்திட வந்தான் என்னை காத்திட நின்றான் இறைவன் வரமாய் எந்நாளும் நினைத்தேன் இனிமை கனவில் எப்போதும் மிதப்பேன்
தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த தங்கை தனை போற்றி பாட அண்ணன் உண்டு
கங்கை நதி தீரத்திலே காலமெல்லாம் மீன்கள் உண்டு தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு
தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு